தருமபுரி, மே 17- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக நீடித்துள் ளது. கர்நாடகா மாநிலம் மற்றும் தமி ழக - கர்நாடகா எல்லைப் பகுதி யான பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிக ரித்து வருகிறது. இந்த நீர்வரத்து ஒகேனக்கல், அஞ்செட்டி, நாட்றம் பாளையம், ஓசூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மலை குன்றுகளில் பெய்த மழையின் கார ணமாகவும், காவிரி கரையோர எல்லைப் பகுதியில் பெய்த மழை யின் காரணமாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிக ரிப்பால் தருமபுரி மாவட்டம், ஒகே னக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது. இந் நிலையில், வியாழனன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநா டிக்கு ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் கனமழை காரணமாக படிப்படியாக அதிகரித்து இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 3 ஆயி ரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து வெள்ளியன்று காலை நிலவரப்படி 3 ஆயிரம் கன அடி யாக நீடித்து வருகிறது. இதன் கார ணமாக மெயின்அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண் ணீர் சீறி பாய்ந்து சென்றது. காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நீர்வரத்தானது பெய்யும் மழையை பொறுத்தே அதிகரிக் கவோ அல்லது குறையவோ வாய்ப் புள்ளது. எனவே, தொடர்ந்து ஒன் றிய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிக்குண்டுலுவில் காவிரி ஆற் றில் நீர்வரத்தை கண்காணித்து வரு கின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்ததால், கோடை கால சீசனில் இந்த முறை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மீன் சமையல் தொழிலாளர்கள், வியா பாரிகள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளிகள் என அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சிய டைந்துள்ளனர்.