ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு தருமபுரி, செப்.21- ஒகேனக்கல்லில் நீர்வ ரத்து 16 ஆயிரம் கனஅடியாக சரிவடைந்ததுள்ளது. கர்நாடக மாநில அணை களில் இருந்து நீர் திறப்பு மற் றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி யில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரியில் கடந்த இரண்டு நாட்க ளாக 20 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்து வந்த்து. இந்நிலையில், புதனன்று காலை நிலவரப்படி 16 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. காவிரியில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத் திற்கு விநாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள் ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை யில் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி யாகவும் உள்ளது.