நாமக்கல், பிப்.15- பள்ளிபாளையம் நகராட்சி சார்பில், அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்பு மீட் டரை அடையாளம் தெரியாத நபர் ஒரு வர் திருடிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டு கள் உள்ளன. பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நகராட்சி சார்பில் ஒன்றிய அரசின் அம் ரூத் திட்டத்தின்கீழ், வீடு, வீடாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு குடிநீரை முறை யாக பயன்படுத்துவதற்கு தண்ணீர் மீட்டர் கருவி ஒவ்வொரு வீடுகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பை ஏற்படுத்து வதற்கு நகராட்சி சார்பில் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. தண்ணீர் மீட்டர் கருவி மட்டும் ரூ.1800 ஆகும். இந்நிலையில், 15 ஆவது வார்டுக்குட்பட்ட போயர் தெருவில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரின் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டி ருந்த குடிநீர் குழாயின் தண்ணீர் மீட்டர் கருவிகள் இரண்டும் வெள்ளியன்று இர வோடு இரவாக திருடப்பட்டுள்ளது. இத னால் அதிர்ச்சியடைந்த அவர் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை பார்த்த பொழுது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தண்ணீர் மீட்டர் கருவிகளை திருடிச் செல்வது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்த நிலையில், தற்போது வைரலாகி வருகிறது. தண்ணீர் மீட்டர் கருவியை திருடும் நபர்கள் அதன் உள்ளே உள்ள காப்பரை தனியே பிரித்து எடுத்து 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பழைய இரும்பு கடையில் விற்று வருவது தெரியவந் துள்ளது. பள்ளிபாளையம் நகராட்சிக் குட்பட்ட பல்வேறு இடங்களிலும் ஆயி ரக்கணக்கான நகராட்சி குடிநீர் குழாய் தண்ணீர் மீட்டர் கருவிகள் திருடப்பட்டு வருவதால், இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.