districts

img

காவிரி ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்

நாமக்கல், ஜூன் 12- பள்ளிபாளையம் காவிரி  ஆற்றில் குப்பை கழிவுகள் கொட்டும் நபர் குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவிரி ஆறு ஓடுகிறது. ஏற்கனவே காவிரி ஆற்றில் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில், செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய் யப்படாமல் சாயக்கழிவு நீர் கலப்பதாக தொடர்ந்து புகார்கள்  எழுந்து வருகிறது. இந்நிலையில், காவிரி ஆற்றில் வழக் கத்தை காட்டிலும் அதிக அளவு சாயக்கழிவு நீர் கலப்பதால், பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், திங்களன்று பள்ளிபாளையம் காவிரி ஆறு புதுப்பாலத்திற்கு நான்கு சக்கர டாட்டா ஏசி வாகனத்தில் வந்த  நபர்கள், வாகனத்தில் இருந்து மூட்டை மூட்டையாக குப்பை  கழிவுகள், துணி கழிவுகளை காவிரி ஆற்றில் கொட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. காவிரி ஆற்றை அசுத்தப்படுத்தும் நபர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.