கோவையில் இளைஞர் களை குறிவைத்து போதை மத்திரை விற்பனை அதிகரித்து வருகிறது. இத்த கைய போதை மாத்திரையை தொடர்ந்து பயன்படுத்தினால். இளைஞர்களுக்கு ஞாபக சக்தி குறைவதோடு, வாழ்க்கை யின் மீதான பிடிமானம் குறையும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கோவை மாநகரில் போதை பொருட்க ளின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல் துறை யினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொண்டு வருகின்றனர். மாநகரில் கஞ்சா புழக்கம் அதிகரிக்கவே ஆபரேஷன் 2.O என்ற பெயரில் காவல் துறையினர் அவ் வப்போது சோதனை மேற்கொண்டு வரு கின்றனர். இந்நிலையில், மருத்துவத்திற் காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை பயன்படுத்தி போதை கொள்ளும் பழக்கம் கோவை இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. இதில், முக்கியமாக மகப் பேறு மருத்துவர்கள் வலி நிவாரணியாக வழங்கும் டைடோல் 100 எம்.ஜி மற்றும் டெபெண்டடால் என்ற மாத்திரைகளை யும், மனநல மருத்துவர்கள் தங்கள் நோயா ளிகளுக்கு வழங்கும் நைட்ரோஜிபம் 100 எம்.ஜி என்ற மாத்திரைகளையும் போதைப் பொருட்களாக இளைஞர்கள் வாங்கி பயன் படுத்துகின்றனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறு கையில், இதுபோன்ற மாத்திரைகள் மருத் துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வழங் கப்படமாட்டாது. ஆனால், சிலர் மருந்துக் கடை நடத்துவோரிடம் கூட்டு சேர்ந்து கொண்டும், இணையதளங்களில் போலி யான மருத்துவர் பரிந்துரை கடிதத்தை யும் கொடுத்து இத்தகைய மாத்திரைகள் வாங்கி விடுகின்றனர். சமீபத்தில் கணபதி அருகே இத்தகைய மாத்திரைகளை விற் பனை செய்த மருந்துக்கடை உரிமையா ளரை கைது செய்துள்ளோம். இந்த மாதத் தில் மட்டும் போதை மாத்திரைகளை விற் பனை செய்த சுமார் 20 பேரை கைது செய் துள்ளோம். இவர்களில் பெரும்பாலா னோர் இளைஞர்களாகவே உள்ளனர். ஒரு மாத்திரையை ரூ.30க்கு வாங்கி அதனை பொடியாக்கி மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் சலைன் நீரில் கலந்து, ஊசி மூலம் நரம்பு வழியாக 5 டோஸ்கள் வரை போதை ஏற்றுகின்றனர். இவர்களிடம் வரும் இளைஞர்களுக்கு ஒரு டோசுக்கு ரூ.500 வரை வசூலிக்கின்றனர். இது அதீத போதையை ஏற்படுத்துவதால் நாளடை வில் இளைஞர்கள் இதற்கு அடிமையா கின்றனர், என்ற பேரரதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மனநல மருத்துவர் மாரின் கண்ணன் கூறுகையில், நைட்ரோஜிபம் என்ற மாத்திரை மன நோயாளிகளுக்கே தனியாக கொடுப்பதில்லை. அதனால் தான் மற்ற மன நல மருந்துகளுடன் சேர்த்துக் கொடுக்கிறோம். இதனை அரசு பரிந்துரைக் கிறது. ஏனெனில் இதில் மனதை அடிமை யாக்கும் தன்மை உடையது. முதலில் நண் பர்களின் தூண்டுதலின் பேரில் இந்த மாத்தி ரையை எடுத்துக்கொள்ளும் இளைஞர் கள், நாளடைவில் அவர்களே இதிலிருந்து மீள முடியாது. திடீரென இந்த மாத்திரையை கைவிட்டால் அவர்களுக்கு மன நல பாதிப்பு, வலிப்பு, ஆவேசம், தூக்கமின்மை, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகள் வர லாம். இத்தகைய பழக்கம் நாளடைவில் மெல்ல மெல்ல அதிகரிக்கும். முதலில் ஒரு மாத்திரையை உபயோகிப்பவர்கள் சில நாட்களிலேயே இரண்டு மூன்று என்று மாத் திரையின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். இதுதொடர்ந் தால் காலப்போக்கில் வாழ்க்கை மீதான பிடி மானம் குறைந்து, ஞாபகசக்தி மற்றும் கவனக்குறைபாடு ஏற்படும். இளைஞர்க ளுக்கு இந்த விஷயத்தில் மோகம் அதிக ரித்து வரும் நிலையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது அக்கறை செலுத்த வேண் டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக ளுக்கு கொடுக்கும் பணத்தை அவர் களிடம் கணக்கு கேட்க வேண்டும். என்ன செலவு செய்கிறார்கள்? எத்தகைய நண் பர்களுடன் இருக்கிறார்கள் என்பதை கண் காணித்தே தீர வேண்டும். இவ்வாறு மாரிக் கண்ணன் கூறுகிறார்.
-கே.எஸ்.எம்.