districts

img

வார்டு கவுன்சிலரை காணவில்லை என பொதுப் பாதையில் தட்டி

திருப்பூர், ஆக.21- 45 ஆவது வார்டுக்கு உட்பட்ட  பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கூறி, கவுன்சிலரை காணவில்லை என தட்டி வைக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பூர் மாநகராட்சிக்கு 45  ஆவது வார்டுக்கு உட்பட்ட சொர்ண புரி லேஅவுட், கோம்பை தோட்டம்,  வெங்கடேஸ்வரா நகர், சத்யா நகர்,  காயிதே மில்லத் நகர், சுகுமா நகர்  உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படைப்  பிரச்சனைகள் எதுவும் நிவர்த்தி செய்யப்படாமல் உள்ளது. புகார் அளிக்க சென்றால் கவுன்சிலர் இருப்பதில்லை எனக் கூறி ஆங் காங்கே கவுன்சிலரை காண வில்லை என தட்டி வைக்கப்பட்டுள் ளது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில்  முறையாக எந்த பணிகளும் நடை பெறவில்லை. முறையான சாக் கடை வடிகால் வசதி இல்லாத தால் வீதிகளில் சாக்கடை கழிவு  நீர் செல்கிறது. மேலும் பல பகுதிக ளில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால்  நோய் தொற்று ஏற்படும் சூழல் உரு வாகியுள்ளது. சில நாட்களாக மழை  பெய்ததில் மழை நீர் சாக்கடை கழிவு நீருடன் சேர்ந்து, வீடுகள் மற் றும் கடைகளுக்குள் சென்று விட் டது. குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்ப டாமலே இருந்தது. முதியவர்கள் பலர் அதில் தடுமாறி விழுந்து காயங்கள் ஏற்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. முறையாக குப்பை களை அகற்றுவதற்கு நடவடிக்கை  எடுக்கப்படாததால், பல பகுதிக ளில் குப்பைகள் மழை போல் குவிக் கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்க் காக தோண்டப்பட்ட சில குழிகளை  மக்களே முயற்சி செய்து மண்ணைக் கொட்டி மூடுகின்றனர்.  வீதிகளுக்குள் செல்லும் சாலை கள் குண்டும் குழியுமாக உள்ளது. இதுகுறித்து கவுன்சிலரிடம் புகார்  அளிக்கலாம் என்றால் அவரைப் பார்க்கவே முடிவதில்லை. பெரும்பாலும் நாம் கூறும் புகார் களை சரிசெய்ய வார கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். இப்ப குதி முழுவதும் பல பிரச்சனைகள் உள்ளது. அரசு உரிய கவனம் செலுத்தி இந்த அடிப்படை பிரச்ச னைகளை தீர்த்து வைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற னர்.  இதுகுறித்து மாமன்ற உறுப்பி னர் பாத்திமா தஸ்ரின் தரப்பில் கூறி யதாவது, சத்யா நகர் முதல் ஆசாத்  பள்ளி சாலை வரை பாலப் பணிகள்  நடைபெற்று வருகிறது. அதே போல் சாக்கடை கால்வாய் பணி யும் நடைபெற்று வருகிறது. இத னால் சாக்கடையை திருப்பிவிட் டுள்ளோம். கடந்த சில தினங்களாக  திருப்பூரில் பலத்த மழை பெய்த காரணத்தால் சாக்கடை நீர் சில  இடங்களில் தேங்கிவிட்டது. பாலப் பணிகளும், சாக்கடை கால்வாய் பணிகளும் நிறைவு பெற்றுவிட் டால். கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு  ஏற்படும். விரைவில் பணிகள் முடிந்து சாக்கடை கால்வாய் பிரச்ச னைக்கு உரிய தீர்வு கிடைக்கும். குப்பைகள் எடுப்பது, சாக்கடை கால்வாயை தூர் வாருவது உள் ளிட்ட பிரச்சனைகள் இருக்கிறது.  இது குறித்து மாமன்ற கூட்டத்தி லும், அரசு அதிகாரிகளிடமும் தொடர்ந்து தெரிவித்து வருகி றோம். அவர்கள் முறையாக நட வடிக்கை எடுக்காததால் சில இடங் களில் இந்த பிரச்சனை உள்ளது. மேலும் தூய்மைப் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. கவுன்சிலருக்கு திருமணம் ஆகி  8 ஆண்டுகளாக குழந்தை இல்லை.  தற்போது கர்ப்பமாக இருப்ப தால் மருத்துவர் மூன்று மாதங்க ளுக்கு ஓய்வு எடுக்கும்படி அறிவு றுத்தியுள்ளார். பொதுமக்கள் சார்பில் தட்டி வைக்கப்பட்டது போல் தெரியவில்லை. ஒரு சிலரின்  தூண்டுதலின் பேரில் தட்டி வைக் கப்பட்டுள்ளது என்றார்.