திருப்பூர், ஜூலை 3- தாராபுரம் அருகே பொன்னாபுரம் ஊராட்சி பகுதியில் புதிய கரித்தொட்டி ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னாபுரம் ஊராட்சியில் கரித் தொட்டி ஆலை அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி யுள்ளதாக கூறப்படுகிறது. இங்கு கரித் தொட்டி ஆலை அமைந்தால், சுற்றுச்சூ ழல் மாசுபாடு ஏற்படும். காற்று மாசுப டும். நிலத்தடி நீர் மாசுபடும். இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கப்ப டுவார்கள் என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பொன்னாபுரம் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும் இந்த ஆலைக்கு அனுமதி மறுக்கவில்லை. எனவே புதன் கிழமை இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 300 பேர் பொன்னாபுரம் ஊராட்சி மன்ற அலுவல கத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராடும் தகவல் அறிந்து தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் ஆய்வாளர் ரவி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காத்திருப்பு போராட்டம் நடத்திய பொது மக்களிடம் காவல்து றையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் தீர்வு எட்டப்படவில்லை. இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், கரித்தொட்டி ஆலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். இந்த ஆலை அமைந்தால் நிலத்தடி நீர் ஆழ்குழாய் கிணறு உள்ளிட்டவை பாதிக்கப்படும். இதன் மூலம் விவசா யமும் இப்பகுதி மக்களின் வாழ்வாதா ரமும் கடுமையாக பாதிக்கும். எனவே கரித் தொட்டி ஆலையை எதிர்த்து முடிவு காணும் வரை எங்கள் போராட் டம் தொடரும் என்று உறுதியாக தெரி வித்தனர்.