districts

img

வீட்டுமனை கேட்டு மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

உடுமலை, மார்ச் 22- உடுமலை தாலுகாவில் வீட்டுமனை பட்டா கேட்டு பல  முறை வருவாய்த்துறைக்கு மனு அளித்தும் கண்டு கொள்ள வில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் கடந்த மூன்று நாட்க ளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடுமலை தாலுகா, வடுபாளையம் கிராமத்தில் லிங்கம நாயக்கன் புதூர் பகுதியில் இருக்கும் அரசு நிலத்தில் விடு தலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை மணி தலைமை யில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்பகு தியை சேர்ந்த வீட்டுமனையில்லாத பட்டியலின மக்கள் மற் றும் பிற சமூக மக்கள் இணைந்து, அப்பகுதிக்கு அம்பேத் கர் குடியிருப்பு என்று பெயர் வைத்து, அரசு நிலத்தில் குடி சைகள் அமைத்தனர். கடந்த ஞாயிறன்று வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு 3 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.