districts

img

வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்

உடுமலை, அக்.26- ஏழை மக்களுக்கு  வழங்கப்பட்ட பட்டா விற்கான  இடத்தை  ஒதுக்காமல் இருக்கும்,  வருவாய்த்துறை நிர்வாகத்தைக் கண்டித்து  மார்க்சிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை மடத் துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத் திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டா்சி யர் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்த நிலையில் போராட்டம் நிறைவு பெற்றது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலூக்கா கொமரலிங்கம் பகுதி மக்களுக்கு  கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 110க் கும் மேற்பட்ட  ஏழை மக்களுக்கு  வருவாய்த் துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா  வழங்கப்பட்டது. பட்டா வழங்கி பல ஆண்டு கள் ஆகியும் இதுவரை  நில அளவை செய்து  இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இது  குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தியும், இன்னும் இடம் அளந்து ஒதுக்கீடு  செய்து தரவில்லை. வழங்கப்பட்ட பட்டாவின்படி பொதுமக்க ளுக்கு  இடம் ஒதுக்கித்தரக் கோரி வட்டாட்சி யர் முதல் வருவாய்த்துறையில் உள்ள  அனைத்து பிரிவுகளிலும் மனு அளிக்கப்பட் டுள்ளது. கடந்த ஆண்டு கோட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகை இட்ட பொதுமக்க ளிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் தங்க ளுக்கு வழங்கிய இடத்தில் நீதிமன்ற வழங்கு  உள்ளது. உடனடியாக அரசின் கவனத் திற்குக் கொண்டு சென்று, பட்டாவின்படி அனைவருக்கும் இடம் தர நடவடிக்கை எடுக் கப்படும் என்ற வாக்குறுதி அளித்தனர்.

ஆனால், அதன்படி பட்டாவிற்கான நிலம்  தரப்படவில்லை. பட்டா இடத்தை அடையா ளம் காணப் போராட்டம் நடத்தும்போது, வரு வாய்த்துறையினர் வெற்று வாக்குறுதிகள் மட்டுமே தருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மடத்துக்குளம் தாலுக்கா செயலாளர் ஆர்.வி. வடிவேல் தலைமையில் வியாழனன்று வரு வாய்த்துறை தந்த வாக்குறுதியின்படி இடத்தை அளவீடு செய்து பிரித்துத்தர வலியு றுத்தி மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவல கத்தில் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ஆர்.மதுசூதனன், விவசாயத் தொழிலாளர்  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.பஞ்ச லிங்கம், தாலூக்கா குழு உறுப்பினர்கள் எம். எம்.வீரப்பன், ஆர்.பன்னீர்செல்வம், ராஜ ரத்தினம், ராதா, வேடபட்டி ஈஸ்வரன் மற்றும்   காந்தி, ஞானபிரகாசம், ரவி, சந்தியா, கிருஷ் ணவேணி, சித்ரா மற்றும் ஓய்வு பெற்றோர் சங் கத்தின் தலைவர் கருணாநிதி உட்பட திர ளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு இம்மாதம் நில வகைமாற்றம்  செய்வது தொடர்பாக ஓர் அரசாணை பிறப் பித்துள்ளது. அதன்படி 60 நாட்களுக்குள் வகைமாற்றம் செய்து பட்டா மனை வழங்க வேண்டும். எனவே இந்த அரசாணை அடிப் படையில் விரைவில் வகைமாற்றம் செய்து  நிலம் அளந்து பிரித்துத் தரப்படும் என்று இந்த  துறை வட்டாட்சியர் எழுத்துப்பூர்வமாக உறு தியளித்தார். இதன் அடிப்படையில் இந்த  காத்திருப்புப் போராட்டம் நிறைவு பெற் றது.