districts

சிபிஎம் ஆனைமலை தாலுகாச் செயலாளராக வி.எஸ்.பரமசிவம் தேர்வு

கோவை, டிச.1- மார்க்சிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகாச் செய லாளராக வி.எஸ்.பரமசிவம்  தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை மாவட்டம், ஆனைமலை தாலுகா 3  ஆவது மாநாடு, ஆனைமலை  வெண்ணிலா திருமண மண்டபத்தில் தோழர் கள் என்.சங்கரய்யா, சீதாராம் யெச்சூரி,  யு.கே.சிவஞானம் ஆகியோர் நினைவரங்கில்  ஞாயிறன்று நடைபெற்றது. மூத்த தோழர்  வி.எஸ்.பாலசுப்பிரமணியம் செங் கொடியை ஏற்றி வைத்தார். தாலுகாக்குழு உறுப்பினர் பி.பரமசிவம், ஆர்.தங்கவேலு, எஸ்.சரிதா ஆகியோர் தலைமை வகித்தனர்.  தாலுகாக்குழு உறுப்பினர் முத்துசாமி வர வேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. சுரேஷ் துவக்கவுரையாற்றினார். தாலுகாச்  செயலாளர் வி.எஸ்.பரமசிவம் அறிக்கையை  முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.ஆர்.முருகேசன் வாழ்த்திப் பேசி னார். இம்மாநாட்டில், பழங்குடி கிராமங்க ளுக்கு வனத்துறை விதித்த  தடைகளை நீக்கி, மின்சார வச தியை ஏற்படுத்தித்தர வேண்டும். வன உரிமைச் சட்டத்திற்கு மாறாக, வன கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்க முடி யாது என்ற நிலைப்பாட்டை மாவட்ட ஆட்சியர் கைவிட வேண்டும். வால்பாறையில் தொழிலாளர்கள் பயன்பெறும்  வகையில் வருங்கால வைப்பு நிதி அலுவ லகத்தை திறக்க வேண்டும். ஆனைமலை  தாலுகா மருத்துவமனையை மேம்படுத்த  வேண்டும். ஆனைமலை ஆற்றில் கழிவு நீர்  கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆனை மலையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து, கட்சியின் ஆனை மலை தாலுகாச் செயலாளராக வி.எஸ்.பரம சிவம் மற்றும் 11 தாலுகாக்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி  நிறைவுரையாற்றினார். முடிவில், சி. புவனேஸ்வரி நன்றி கூறினார்.