கோவை, மே 8- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் வி.பி. சிந்தன் 37 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தொழிலாளர்களின் ஆதர்ச நாயகன், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஸ்தா பக தலைவர்களில் ஒருவரான மறைந்த வி.பி.சிந்தன் அவர்களின் 37 ஆவது நினைவு தினம் கோவை யில் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் கோவை டாடாபாத் மின்வாரிய மத்திய அலுவலகத்தில் நினை வஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் அவரது உருவப்படத் திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு, சங்கத்தின் கோவை மாநகரத் தலைவர் வி. மதுசூதனன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற் றினார். மாநகர கிளைப் பொரு ளாளர் சாதிக்பாஷா, ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் சார்பில் ஞானப்பிரகாசம் உள்ளிட்ட திர ளான மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பைச் சார்ந்த அனில்குமார் என்பவ ரின் மகன் அபிநந்த், பிளஸ் 2 தேர்வில் 600க்கு 537 மார்க் எடுத்ததற் காக, அம்மாணவருக்கு சால்வை அணிவித்தும் பரிசு வழங்கியும் கௌரவிக்கப்பட்டது. இறுதியாக, சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.பழனிச்சாமி நன்றி கூறினார். திருப்பூர் இதேபோன்று, தோழர் வி.பி. சிந்தனின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகு திகளில் கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பு நடைபெற்ற வி.பி. சிந்தன் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி தலைமை ஏற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், சிஐடியு கட்டுமான தொழிலா ளர் சம்மேளனப் பொதுச் செயலா ளர் டி.குமார் ஆகியோர் வி.பி.சிந் தன் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர். பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் உள் பட சிஐடியுவினர் கலந்து கொண்ட னர். ஊத்துக்குளி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தாலுகா குழு அலு வலகம் முன்பு புதன்கிழமை வி.பி. சிந்தன் நினைவஞ்சலி நிகழ்ச்சி கட்சியின் தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமை யில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் நினைவுரை ஆற்றி னார். தாலுகா குழு உறுப்பினர் கே.ஏ.சிவசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா செயலா ளர் கு.பாலமுரளி, நடராஜ், ராம சாமி, செல்வகுமார், நாகராஜ், ஜோதிபாசு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் அதேபோல் காங்கேயத்தில் வி.பி.சிந்தன் 37ஆவது நினைவு நாள் அரசுப் பேருந்து பணிமனை முன்பாக கடைப்பிடிக்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்களுக் காக வாழ்ந்த ஒரு மகத்தான தலை வர், கத்திக்குத்து சிகிச்சைக்கு பின் மீதமுள்ள தன்னுடைய ரத்தமும் சதையும் தொழிலாளர் வர்க்கத் திற்கு என்று வாழ்ந்த மகத்தான தலைவர் வி.பி.சிந்தன் நினைவை போற்றி தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கேயம் கிளைத் தலைவர் விஸ்வநாதன் தலைமை யில் நினைவஞ்சலி நடைபெற்றது. வி.பி.சிந்தன் நினைவை போற்றும் வகையில் சிஐடியு பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் கே.திரு வேங்கடசாமி ஆகியோர் உரை யாற்றினர். நிறைவாக கிளைச் செய லாளர் சுரேஷ் நன்றி கூறினார்.