நாமக்கல், ஏப்.30- நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் கருவி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக மிண்ணனு பாதுகாப்பறையில் பாதுகாப் புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) பெங்களூருவில் இருந்து 320 புதிய கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit) மற்றும் 580 புதிய வாக்களர்கள் சரி பார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகளும் (VVPAT) வந்திருந்தது. இதனை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னி லையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மின்னணு பாது காப்பறையில் ஏற்கனவே 4214 வாக்குப்பதிவு இயந்திரங் களும், 2622 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 970 வாக்கா ளர்கள் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகளும் உரிய பாதுகாப்புடன் உள்ளது.