உதகை, ஏப்.5- பூங்கா ஊழியர்கள் ஆதார், வாக்கா ளர் அட்டைகளை பாடையில் போட்டு ஆட்சியரிடம் ஒப்படைக்கும் ஆவேச போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் தோட்டக்க லைத்துறைக்கு சொந்தமான பூங்கா மற் றும் பண்ணைகளில் நிரந்தர மற்றும் தற் காலிக என, 900 பேர் பணி புரிகின்றனர். சிறப்பு காலமுறை ஊதியத்தை, கால முறை ஊதியமாக மாற்றி தர வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலி யுறுத்தி மார்ச் 23ம் தேதி முதல் தாவரவி யல் பூங்கா வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு கட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில், புதனன்று தோட் டக்கலை இணை இயக்குநர் கருப்பு சாமி, துணை இயக்குநர் சிபிலா மேரி, உதவி இயக்குநர்கள் ராதாகிருஷ் ணன், பாலசுந்தரம் உள்ளிட்ட அதிகாரி கள் பூங்கா ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து. பூங்கா ஊழியர்கள் தங்களது ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை பாடையில் போட்டு பூங்காவில் இருந்து ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளிக்க வந்தனர். பூங்கா நுழைவு வாயிலில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார். தடையை மீறி ஆட் சியர் அலுவலகம் சென்று மனு அளித் தனர். தோட்ட தொழிலாளர்களின் நியா மான, உறுதிமிக்க போராட்டத்தால் மாவட்ட நிர்வாகம் திணறிக்கொண்டி ருக்கிறது.