2021 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டி யிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார். இவர், அண்மை யில் உடல் நலக்குறைவால் உயி ரிழந்ததையொட்டி, அந்த தொகு தியில் வரும் பிப்.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித் தது. இதையடுத்து அந்த தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதி நடைமுறைகள் அம லுக்கு வந்துள்ளது. இடைத்தேர்த லில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா-வின் தந்தை யும், முன்னாள் ஒன்றிய அமைச்ச ருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோ வன், அதிமுக இபிஎஸ் (எடப்பாடி கே.பழனிச்சாமி) அணி சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார் பில் மேனகா மற்றும் 50க்கும் மேற் பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்த வேட் பாளர்கள் மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக ஓபிஎஸ் (ஓ.பன்னீர்செல்வம்) அணி சார்பில் செந்தில்முருகன் என்பவர் வேட் பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதே போல, அமமுக சார்பில் சிவபிர சாந்த் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இரட்டை இலை சின்னம் கோரி இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் முட்டி மோத, இதுவரையும் தில்லி பாஜக தலைமை அழைத்து சமாதானம் பேசியது. இதன் விளைவாக, தனது வேட்பாளரை திரும்பப்பெறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்தார். மேலும், இரட்டை இலை சின்னம் முடங்கி விடக்கூ டாது என்பதற்காக தனது சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை திரும் பப்பெறுவதாகவும், இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட் பாளரை வெற்றி பெற வைக்க தேர் தல் பரப்புரையில் ஈடுபட உள்ள தாகவும் கூறி, ஓபிஎஸ் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இவரை பின்தொடர்ந்து அமமுக டிடிவி தின கரன், “தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்காததால், வேட்பாளரை திரும்பப்பெறுகிறோம். இந்த தேர் தலில் போட்டியிடவில்லை” என அறிவித்தார். இதன் காரணமாக ஓபிஎஸ் அணியினர் மற்றும் அம முக கட்சியினர் ஈரோடு இடைத் தேர்தல் களத்திலிருந்து முழுமை யாக வெளியேறி வருகின்றனர். கொங்கு மண்டலத்தில், ஓபிஎஸ் மற்றும் தினகரனுக்கு மிகப்பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படி கட்சியினரோ, அமைப்போ இல்லா ததால், ஓபிஎஸ் அணி மற்றும் தின கரன் கட்சியைச் சார்ந்தவர்கள் பெரும்பாலானோர் தேர்தல் பரப்பு ரைக்காக மதுரை, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கட்சி ஆதர வாளர்கள்,
ஈரோடு இடைத்தேர்த லுக்காக தேர்தல் பரப்புரை மேற் கொள்வதற்காக ஈரோடு அழைத்து வரப்பட்டிருந்தனர். பிரச்சாரத்திற் காக ஆங்காங்கே உள்ள லாட்ஜ் களில், திருமண மண்டபங்களில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது இரு அணியினரும் தேர்தலில் போட்டியிடாததால், கட்சி ஆதரவா ளர்கள், தங்கள் சொந்த ஊர்க ளுக்கு மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு கிளம்பி வருகின்றனர். இதுகுறித்து அமமுக கட்சி யைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறு கையில், டி.டி.வி.தினகரன் ஆணைக் கேற்ப, மதுரையிலிருந்து பத்துக் கும் மேற்பட்டோர், தேர்தல் பணி யாற்றுவதற்காக ஈரோடு பகுதி யில் தங்கியிருந்து தேர்தல் பணி களை மேற்கொண்டு வந்தோம். தற்போது அமமுக தேர்தலில் போட்டியிடவில்லை என தலைவர் கூறியதால், எங்களுக்கு இங்கு வேறு ஏதும் வேலைகள் இல்லாத தால், கிளம்பி செல்கிறோம், என் றார். பல அதிரடி அரசியல் செயல் பாடுகளால் ஈரோடு இடைத்தேர் தல் களம் விறுவிறுப்பு அடைந்துள் ளது. -(ந.நி.)