districts

img

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி சாதனை

திருப்பூர், செப்.24- திருப்பூர் மாவட்டம் வடக்கு குறு மைய அளவிலான தனியார், அரசு மற் றும் அரசு உதவி பெறும் 64 பள்ளிக ளுக்கு இடையே நடைபெற்ற விளை யாட்டு போட்டியில் வி.கே. அரசு மேல்நி லைப் பள்ளி தொடர்ந்து ஆறாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பி யன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டியில் 88 அணிகள் கலந்து  கொண்டதில் கபடி  போட்டியிலும், கேரம் இரட்டையர் பிரிவிலும், 100  மற்றும் 200 மீட்டர் நீச்சல் போட்டியி லும், சிலம்பம் போட்டியில் முதல் இடம்  பெற்றுள்ளனர். இதன்மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்று  அய்யன்காளிபாளையம்  வி.கே அரசு  மேல்நிலைப்பள்ளி சாதனைப் படைத்துள்ளது. அய்யன்காளிபாளையம்  வி.கே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குறுமைய அளவில் 14 வயதுக்கு உட் பட்ட மாணவர் பிரிவில் கபடி, ஒற்றையர்  மற்றும் இரட்டையர் கேரம், ஒற்றையர்  மற்றும் இரட்டையர் வளையப்பந்து, பூப்பந்து மற்றும் ஒற்றையர் டென் னிஸ் போட்டிகளில் முதலிடத்தை வென் றுள்ளார்கள். 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் கபடி, ஒற்றை யர் மற்றும் இரட்டையர் கேரம், ஒற்றை யர் மற்றும் இரட்டையர் வளையப் பந்து போட்டிகளில் முதலிடம் பெற்றுள் ளனர். பூப்பந்து, ஒற்றையர் மற்றும் இரட் டையர் டென்னிஸ், விளையாட்டில் இரண்டாம் இடத்தையும் வென்றுள் ளனர். 19 வயதிற்கு உட்பட்ட மாண வர்கள் பிரிவில் கபடி, ஒற்றையர் மற்றும்  இரட்டையர் கேரம், ஒற்றையர் மற்றும்  இரட்டையர் வளையப்பந்து, ஒற்றை யர் மற்றும் இரட்டையர் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் முதலிடம் வென் றுள்ளனர். மேலும் 14 வயதிற்கு உட் பட்ட மாணவிகள் பிரிவில் கபடி போட் டியில் முதலிடத்தை வென்றுள்ளனர். 17  வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில்  சதுரங்கப் போட்டியில் முதல் மற்றும் மூன்றாம் இடத்தை வென்றுள்ளனர். 19  வயதிற்கு உட்பட்ட மாணவியர் பிரிவில்  கபடி போட்டியில் இரண்டாம் இடத்தை  வென்றுள்ளனர். மேலும், 17 வயதிற்கு  உட்பட்ட மாணவியர் பிரிவில் 100 மீட்டர்  தடை தாண்டும் போட்டியில் முதலிடத் தையும் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில்  மூன்றாம் இடத்தையும் மேலும் நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடத் தையும் வென்றுள்ளனர்.  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், பள்ளி அளவிலான மாணவர்கள் கபடி போட் டியிலும், இரட்டையர் பிரிவில் கேரம் போட்டியிலும், சிலம்பம் தொடு போட்டி யிலும் மற்றும் 100 மீட்டர் நீச்சல் போட் டியிலும் முதலிடம் வென்றுள்ளனர். மேற்கு ரோட்டரி கிளப் சார்பில் நடை பெற்ற யோகா போட்டியில் 6 முதல்  8 ஆம் வகுப்பு பிரிவில் முதலிடத்தை யும், 8 முதல் 10 ஆம் வகுப்பு பிரிவில்  முதலிடத்தையும் மற்றும் 10 முதல் 12  ஆம் வகுப்பு பிரிவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மேலும், இந்திய விளையாட்டு பள்ளி குழுமம் நடத்திய 19 வயதிற்கு உட் பட்ட மாணவர் கபடி போட்டியில் 12  ஆம் வகுப்பு மாணவன் ஆர்.கவின்ராஜ்  மாநில அளவிலான கபடி போட்டிற்கு தேர்வு பெற்றுள்ளார். இந்த சாதனையை கொண்டாடும் விதமாக செவ்வாயன்று இறைவழி பாட்டுக்கூட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி யின் தலைமை ஆசிரியை பொ.சரவ ணாதேவி வரவேற்றுப் பேசினார். பள்ளி  வளர்ச்சிக்குழு தலைவர் டிக்சன் குப்பு சாமி, துணைத் தலைவர் கே.மாரப் பன், பெற்றோர் ஆசிரியர் கழக பொரு ளாளர் முருகேசன், உதவி தலைமை ஆசிரியை சாந்தி, முன்னாள் மாணவர் கள் சிலம்பம் பயிற்சியாளர் ஆர்.ராதாகி ருஷ்ணன், பூப்பந்து பயிற்சியாளர்கள் அருண், செந்தில், ராஜசேகர் உட்பட  ஆசிரியர்கள், அலுவலக பணியாளர் கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசுகளும், பதக் கங்களும் வழங்கிப் பாராட்டினர். மாண வர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்.ராஜா,  ஜெயகண்ணன், வேல்முருகன் ஆகி யோரை பாராட்டினர். முடிவில், உதவி  தலைமை ஆசிரியர் ஆர்.ராஜதுரை நன்றி கூறினார்.