நாமக்கல், ஆக.21- இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் தொடர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் வட்டம் பல்லக்காபாளை யம், ஆயக்கவுண்டம்பாளையம், மலபாளையம், நல்லாம்பாளை யம், மஞ்சு பாளையம், குட்டி கிணத் தூர், நேரு நகர், குளத்துக்காடு, வாசுகி நகர், தட்டாங்குட்டை உள் ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசா யக்கூலித் தொழிலாளர்கள் குடும் பங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஏழை விவசாயிகளின் வறுமையை உணர்ந்து, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று நடைபெற்ற போராட்டத்திற்கு சங் கத்தின் மாநிலச் செயலாளர் சி. துரைசாமி, தலைமை ஏற்றார். மாநி லப் பொருளாளர் பழனிச்சாமி துவக்கி வைத்தார். சங்க நிர்வாகி கள் சின்னதாய், ரேவதி, சித்ரா, ரமேஷ், முருகேசன் குப்பாயி, அம ராவதி, ஜெயா உள்ளிட்டோர் முன் னிலை வகித்தனர். பால் உற்பத்தி யாளர் சங்க மாநில பொதுச் செயலா ளர் பெருமாள் ஆகியோர் போராட் டத்தின் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். தொடர் போராட்டத்தை அடுத்து, குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக் குமார் மற்றும் மாவட்ட நல அலுவ லர்கள் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதில், மூன்று மாத காலத்திற்குள் அரசு புறம்போக்கு நிலங்களை ஆய்வு செய்து பய னாளிகளுக்கு பட்டா வழங்க வேண் டும் என போராட்டக்காரர்கள் வலியு றுத்தினர். இந்நிலையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப் படாத நிலையில், போராட்டக்காரர் கள் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடு பட்ட சித்தாயி என்பவர் மயக்க மடைந்து கீழே விழுந்தார். உடனடி யாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூல மாக அரசு மருத்துவமனைக்கு முத லுதவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். செவ்வாயன்று இரவு வரை நீடித்த போராட்டத்தை யடுத்து வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளார் இமயவரம்பன், குமார பாளையம் காவல் ஆய்வாளர் தவ மணி, வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் போராட்டக்காரர்கள் மீண் டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, ஒரு சில தினங் களில் அரசு புறம்போக்கு இடங் கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதி யான பயனாளிகளுக்கு வழங்கு வது குறித்து நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் உறுதி அளித் தனர். இதனையடுத்து, இரவு 10.30 மணிவரை நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.