நாமக்கல், ஜூன் 13- நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நகர்ப்புற வேலை திட்டம் என்ற பெயரில் புதிதாக பேரூராட்சி பகுதி மக்களுக்கு நூறு நாள் வேலை திட்டம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலை யில், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் இந்த திட்டம் அமலாக வில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், இதே நிலைதான் நீடித்து வருகிறது. எனவே, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கும் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராசிபுரம் வட்டம், நாமகிரிப் பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங் கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ் தலைமை ஏற்றார். அகில இந்திய துணை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ. லாசர், மாநில பொருளாளர் ஏ. பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதனைத்தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட கிராம மக்களிடமிருந்து நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத் தில் பதிவு செய்வதற்கான படிவங் கள் பெறப்பட்டு, பேரூராட்சி அதி காரிகளிடம் வழங்கப்பட்டது. முன்னதாக இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஏ.ரங்கசாமி, மாணவர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சபாபதி, மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, ஒன்றிய செயலாளர் குப்பண்ணன், ஒன்றிய பொருளாளர் ரஜினி, விவ சாய தொழிலாளர் சங்க முன்னணி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளா னோர் கலந்து கொண்டனர்.