திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து பாஜக-வினர் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து வெள்ளியன்று (மார்ச் 10) பல்லாவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர்கள் தா.கிருஷ்ணா (தாம்பரம்), வெங்கடேசன் (ஆலந்தூர்), மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு, விஜயலட்சுமி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர். சைதாப்பேட்டையில் கட்சியின் சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சு.வெள்ளைச்சாமி, ச.லெனின், ம.சித்ரகலா, தி.நகர் பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர் .