கோவை, ஜன.9- கோவை நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டில் 16.11 லட்சம் வழக்குகள் பதிவானது. இதன் மூல மாக ரூ.6.91 கோடி அபராதம் வசூலிக் கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகை யில், கடந்த 2022 ஆம் ஆண்டில் அதி வேகம் என்ற வகையில் 18 ஆயிரத்து 903 வழக்குகள், ஓவர்லோடு ஏற்றிய தாக 106 வழக்குகள், சரக்கு வாகனத் தில் பயணிகள் ஏற்றி சென்றதாக 3 ஆயிரத்து 486 வழக்குகள், குடி போதையில் வாகனத்தில் சென்ற தாக 7 ஆயிரத்து 736 வழக்குகள், செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக 15 ஆயிரத்து 634 வழக் குகள், போக்குவரத்து விதிகளை மீறி யதாக 56 ஆயிரத்து 65 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டியதாக 4 லட்சத்து 87 ஆயிரத்து 338 வழக்கு கள், சீட்பெல்ட் போடாமல் வாகனம் ஓட்டியதாக 35 ஆயிரத்து 170 வழக் குகள், அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றி சென்றதாக 7 ஆயிரத்து 676 வழக் குகள் என மாநகரில் மொத்தமாக 10.48 லட்சம் வழக்குகள் பதிவா னது. இதன் மூலமாக ரூ.7.22 கோடி அப ராதம் வசூலிக்கப்பட்டது. ஸ்பாட் பைன் என்ற வகையில் ரூ.6.10 கோடி வசூ லிக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண் டில் 866 விபத்துகள் நடந்தன. இதில் 234 பேர் இறந்தனர்; 691 பேர் காயம டைந்தனர். கடந்த ஆண்டில் (2022) ஆயிரத்து 83 விபத்துகளில், 267 பேர் இறந்துவிட்டனர்;
939 பேர் காய மடைந்துள்ளனர். கடந்த ஆண்டில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக குறைவாக வழக்குப் பதிவு செய்தும், அபராதம் அதிகமாக பெறப்பட்டுள்ளது. மேலும், கோவை யில் பல்வேறு இடங்களில் சிக்னல் கள் பழுதாகியிருக்கிறது. மேம்பால பணிகள் அதிகளவு நடக்கிறது. வாக னங்கள் நீண்ட நேரம் போக்குவ ரத்து நெரிசலில் சிக்கி திணறி செல்ல வேண்டிய நிலை இருந்து வரு கிறது. குறிப்பிட்ட சில பகுதியில் நெரி சலில் காத்திருக்கும் வாகனங்கள் வேகமாக செல்ல முயற்சி செய்யும் போது விபத்து ஏற்படுவதாக தெரி கிறது. அவிநாசி சாலை, மேட்டுப் பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை உள்ளிட்ட பிரதான சாலை களில் விபத்துகள் அதிகமாகி வருவ தாக தெரியவந்துள்ளது. காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் சென்று வருவது அதிகமாக இருக் கிறது. அவிநாசி சாலையில், இதர சாலைகளை காட்டிலும் இரு மடங்கு வாகனங்கள் செல்கிறது. ஒரே சாலை யில் அதிக வாகனங்கள் செல்வதால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நெரி சல் நீடிக்கிறது. மேம்பால பணி முடிந் தால் மட்டுமே இந்த சாலையில் போக் குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என போக்குவ ரத்து போலீசார் தெரிவித்தனர்.