தருமபுரி, நவ.21- நூறுநாள் வேலை கேட்டு மந்தன் கொட்டாய் கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். தருமபுரி ஒன்றியம், வெள் ளாலப்பட்டி ஊராட்சிக்குபட் டது மத்தன்கொட்டாய் கிராமம். இங்கு 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் ஏழை மக்கள் சொந்த விவசாய நிலம் இல்லை பெரும் பகுதி மக்கள் விவசாய கூலியை நம்பி உள்ளனர். இந் நிலையில் இந்த ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை. இதனால் சொந்த கிரா மத்தை விட்டுவிட்டு வெளியிடத்திற்கு வேலை செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர். எனவே இந்த ஆண்டு முடிவதற்குள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர்.