குழந்தை தொழிலாளர்கள் இருவர் மீட்பு
தாராபுரம், ஆக. 10 – தாராபுரம் போலீஸார் திருமலைபாளையம் பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த விழுதுகள் தன் னார்வ அமைப்புக்கு தாராபுரம் அருகே உள்ள திருமலை பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் குழந்தை தொழி லாளர்கள் பணியாற்றி வருவதாக சிலர் தகவல் தெரிவித் துள்ளனர். இது தொடர்பாக விழுதுகள் அமைப்பின் சார்பில் தாராபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாராபுரம் போலீசார் திருமலைபாளையம் பகு தியில் விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் சூளையில் வேலை செய்வது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் சிறுவர் களை மீட்டு திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழு முன்பு ஆஜர்படுத்தி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். கொரோனா தொற்றுக்கு பிறகு அந்த சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் குழந்தை தொழிலாளர்க ளாக சூளையில் வேலை செய்து வந்துள்ளனர். இது தொடர் பாக வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து
தாராபுரம், ஆக.10 - தாராபுரம் அருகே திண்டுக்கல் தனியார் நூல் மில்லில் இருந்து காடா துணி ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து ஓட்டுநர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பித்த னர். திண்டுக்கல் தனியார் மில்லில் இருந்து கோவையில் உள்ள ஆலையில் சாயம் கட்ட, காடா துணி பைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வேன் அங்கு இருந்து புறப்பட் டது. வாகனத்தை தாமரபாடியை சேர்ந்த பரமசாமி (45) என்ப வர் ஓட்டி வந்தார். அவருடன் வேன் கிளீனர் சுப்பிரமணி என்ப வர் அமர்ந்து உடன் பயனித்தார். சரக்கு வாகனம் திண்டுக்கல் தாராபுரம் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தது. தாரா புரம் அலங்கியம் ரவுண்டானா அருகே முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது லாரியின் பக்க வாட் டில் மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கட்டப் பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநரும், கிளீனரும் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சரக்கு வேன் கவிழ்ந்ததால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங் கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த தாரா புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கிரேன் மூலம் வேனை தூக்கி நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதில் சரக்கு வாகன ஓட்டுநர் மற்றும் கிளீனர் சிறு காயத்துடன் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் காரணமாக ஒட்டன் சத்திரம் தாராபுரம் பைபாஸ் சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
உரிமைத்தொகை படிவம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
அவிநாசி, ஆக.10 – அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் மகளிர் உரிமைத் தொகை படிவத்தை முகாம்களில் குறித்த நேரத்தில் கொடுக்க முடியாமலும், விண்ணப்பங்களை எங்கு கொடுப்பது என்று தெரியாமலும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி பொறுப் பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதி அளித்ததில் ஒரு சில நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. இந்த நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு அரசு சார்பில் மாதம்தோறும் ஆயி ரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தது. இத்திட்டத்தில் மகளிரை சேர்ப்பதற்கு பொது விநியோகக் கடை ஊழியர் கள் மூலமாக விண்ணப்பப்படிவம் வழங்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் படிவத்தை கொடுக்குமாறு எழுதப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பல இடங்களில், பொதுமக்கள் குறித்த நேரத்தில் படிவங்கள் கொடுக்க முடியாமல் மருத்துவ வேலை, வெளியூர் பயணம் போன்றவைக்குச் சென்று விட்டனர். இதன் காரணமாக படி வங்களை இல்லத்திலேயே வைத்து எங்கு கொடுப்பது என்று தெரியாமல் பெண்கள் பலர் தவித்து வருகின்றனர். இதுகு றித்து பொதுமக்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தந்த பகுதிகளில் மீண்டும் ஒரு நாள் முகாம் நடத்தி பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருத்தி ஏலம்
அவிநாசி, ஆக.10 - அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் பருத்தி ஏலம் நடை பெற்றுவருகிறது. இந்த வாரம் நடந்த பருத்தி ஏலத் திற்கு 736 மூட்டை பருத்தி வந்திருந்தது. இதில், ஆர் சிஎச். ரக பருத்தி குவிண் டால் ரூ.6800 முதல் ரூ. 7539 வரையிலும் ஏலம் போனது. மட்டரகம் (கொட்டுரகம்) பருத்தி குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை வியாபா ரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தில் 145 பருத்தி விவசா யிகளும், 7 பருத்தி வியாபா ரிகளும் பங்கேற்றனர். ஏலத் தின் மொத்த மதிப்பு ரூ.16.85 லட்சம் ஆகும்.
கிராம சுகாதார செவிலியர்கள் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஆக.10 - தாய் சேய் நலம் பேணுவதை பாதிப்படையச் செய்யும் வகையில் பணிச்சுமை ஏற்படுத்தும் பொது சுகாதாரத் துறை யின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் பூலுவபட்டியில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பாக வியாழனன்று இந்த ஆர்ப் பாட்டம் மாவட்டத் தலைவர் வி.அன்னம் தலைமையில் நடை பெற்றது. இதில் யூ வின் செயலி ஆன்லைன் பணிகளை கிராம சுகாதார செவிலியர்களிடம் திணிக்கக் கூடாது, 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார மையக் காலிப் பணியி டங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கூகுள் சீட் அறிக்கை கேட்டு கால நேரமின்றி அச்சுறுத்துவதைக் கைவிட வேண்டும், தகவல் பதிவாளர்களாக (டேட்டா ஆப்பரேட்டர்) கிராம செவி லியர்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், தாய் சேய் நலப் பணிகளை மட்டும் செய்வதற்கு அனுமதித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் கள் எழுப்பினர். சத்தியகலா வரவேற்றார். சங்கத்தின் நிர்வாகி களில் ஒருவரான பூங்கொடி தொடக்க உரை ஆற்றினார். இவர் களது கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.ராணி உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் சிறப்புரை ஆற்றி னார். சகோதர சங்க நிர்வாகிகள் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். சுகாதார ஆய்வாளர் சங்க நிர்வாகி விவேகானந்தன் நிறைவுரை ஆற்றினார். கிராம சுகாதார செவிலியர்கள் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பங்கேற்றனர். நிறைவாக எக்ஸ். இமாகுலேட் கீதா நன்றி கூறினார்.
சிந்தனை அரங்கு
ஈரோடு, ஆக.10- ஈரோடு புத்தகத் திருவிழாவில் புதனன்று சிந்தனை அரங்கு நிகழ்வு புதனன்று நடைபெற்றது. அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் எம்.சின்னசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அக்னி ஸ்டீல்ஸ் இயக்குநர் கே.தங்கவேலு முன்னிலை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் அறிமுகவுரை நிகழ்த்தினார். கவிஞர் கே.ஜீவபாரதி ‘பாரதி வழியில் பட்டுக்கோட்டை’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி னார். அவர் தனது உரையில் மகாகவி பாரதி, மக்கள் கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் ஏற்படுத்திய சமூகத் தாக்கங்கள், சுதந்திர தாகம், சமூகக் கண்ணோட்டம் பற்றி கருத்துரையாற்றினார். முன்னதாக, மறைந்த கல்வெட்டறிஞர் புலவர் செ. இராசு திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், திரளானோர் பங் கேற்றனர்.
கூடுதல் நிதி ஒதுக்கீடு
ஈரோடு, ஆக. 10- பழங்குடி மாணவர்களின் போக்குவரத்து மற்றும் பாது காவலர் நிதி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரம், கொங்கர்பாளையம் ஊராட்சியில் விளாங்கோம்பை பழங்குடியினர் குடியிருப் பிலிருந்து வினோபா நகர் மற்றும் கொங்கர்பாளையம் ஒன்றியங்களில் உள்ள தொடக்கநிலை, உயர் தொடக்க நிலை மற்றும் உயர்நிலை மாணவர்களின் போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் வசதிக்காக ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.600- வழங்கப்பட்டு வந்தது. இது வனப்பகுதியாகவும், காட்டாற்று ஓடைகளால் சரியான பாதை இல்லாத நிலை உள்ளது. எனவே, தொகை போதுமானதாக இல்லை என்ற கோரிக்கை எழுந்தது. இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர், மாநிலத் திட்ட இயக்குநரின் பார்வைக்குக் கொண்டு சென் றார். மேலும் கூடுதல் தொகையாக ரூ.700 வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதன்படி, ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று மாதம் ஒன்றிற்கு ஒரு மாணவனுக்கு ரூ. 1300 வீதம் 32 மாணவர்களுக்கு ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 11 மாதங்களுக்குக் கொடுக்கப்படும். பள்ளி ஆரம்பித்து இரண்டு மாத காலத்திற்குள் இந்த பிரச்சனையைத் தீர்வுக்குக் கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிற்கு பள்ளிக்கல்வித்துறையினர் நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சேலம், ஆக.10- சேலம் கோட்டத்தில் இன்று (வெள்ளியன்று) முதல் 16ஆம் தேதி வரை 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கிறது என சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை முதல் 16ஆம் தேதி வரை சேலம் புறநகர், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துக்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவர் கொலை: 3 பேர் கைது
கோவை, ஆக.10- சாய்பாபா காலனி அருகே முதியவரை கொலை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத் தனர். கோவை மாவட்டம், சாய்பாபா காலனி, கே.கே.புதூர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் 60 வயதான முதிய வர் தலையில் காயத்துடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசா ரணையில், அந்த முதியவர் அதேப்பகுதியைச் சேர்ந்த முஸ்தாக் (58) என்பதும், தனியார் நிறுவனத்தில் மேற்பார்வை யாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அவரின் தலை யின் பின்புறம் காயம் இருந்தது. இதனால் அவரை அடித்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அதேப்பகுதியை சேர்ந்த 3 பேர் முஸ்தாக்கை சரமாரியாக தாக்கி, சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியதும் தெரியவந்தது. இதில் அவரு டைய தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அதேப்பகுதியை சேர்ந்த ராகுல் (24), மணிகண்ட மூர்த்தி (26), மனோஜ் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், கே.கே.புதூர் பகுதியில் 24 வயது வாலிபர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். அவருடைய மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது, முஸ்தாக் தாய்ப்பால் கொடுத்ததை வீடியோ எடுத்ததாக கூறி, ராகுல், மணிகண்டமூர்த்தி, மனோஜ் ஆகியோர் சேர்ந்து முஸ் தாக்கை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளோம், என்றனர்.
வெடிப்பொருளுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது
உதகை, ஆக.10- கூடலூர் அருகே தங்கத்துகளை தோண்டி எடுக்க வெடிபொருளுடன் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, நடு காணி அருகே பொன்னூர் கோல்டு மைன்ஸ் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடு வதாக பந்தலூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வனச்சரகர் சஞ்சீவ் தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது கோல்ட் மைன்ஸ் வனப்பகுதியில் 3 பேர் நடமா டுவது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரை யும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வனவிலங்கு களை வேட்டையாடவும், தங்கத்துகள்களை தோண்டி சேகரிக்க வெடிபொருள் வைத் திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப் பையா ஆகியோர் உத்தரவின் பேரில், தேவா லாவில் உள்ள வனச்சரகர் அலுவலகத்திற்கு பிடிபட்ட 3 பேரையும் அழைத்து வந்து விசா ரணை நடத்தினர். இதில் அவர்கள் தேவாலா அட்டி பகுதியைச் சேர்ந்த யோகேந்திரன் (40), பொன்னுரைச் சேர்ந்த பரமேஸ்வரன் (42), கீழ் நடுகாணியைச் சேர்ந்த ஜெயச் சந்திரன் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து வெடிபொருளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து, யோகேந்திரன், பரமேஸ் வரன், ஜெயச்சந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதன்பின் அவர்களை பந்தலூர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, கூட லூர் கிளை சிறையில் அடைத்தனர்.
ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் ரூ.1.09 கோடி அபராதம்
சேலம், ஆக.10- ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பய ணித்த 16 ஆயிரத்து 346 பேரிடமிருந்து ரூ.1.09 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறை கேடாகவும் பயணம் செய்யும் நபர்களை டிக் கெட் பரிசோதகர்கள் பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள். சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா உத்தரவின் பேரில், முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மாதம் சேலம் கோட்ட பகுதிகளில் இயங்கும் ரயில்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் டிக்கெட் இன்றி பயணித்த 10 ஆயி ரத்து 415 பேருக்கு ரூ.78.90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதே போல முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து கொண்டு முன் பதிவு பெட்டியிலும், 2ஆம் வகுப்பு முன் பதிவு டிக்கெட் எடுத்து கொண்டு குளிர்சாதனப் பெட்டிகளிலும் முறைகேடாக பயணித்த 5 ஆயிரத்து 890 பேரிடம் இருந்து ரூ.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தவிர ரயில் களில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக லக்கேஜ் எடுத்து சென்றதாக 41 பயணி களுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. அதன்படி, கடந்த மாதம் மட்டும் மொத்தம் 16 ஆயிரத்து 346 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 877 அப ராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்
நாமக்கல், ஆக.10- மின் கட்டணத்தை குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்கு பவர்லூம் சங்கம் வலியுறுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யத்தில் கொங்கு பவர்லூம் சங்க மகாசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தற் போது உயர்ந்துள்ள மின்சார கட்டணத்தை, முன்பிருந்த நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடி மாதம் போதிய ஆர்டர் இல்லாததால், உற்பத்தி செய்யப் பட்ட ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன. அவைகளை அரசு சார்பில் கொள்முதல் செய்து, விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி ரகங்கள் எவை என்பதை தெளிவுபடுத்தி, அதனை அரசு ஆணையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விடுதி மாணவர்களுக்கு தரமற்ற உணவு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
தருமபுரி, ஆக.10- தருமபுரி அருகே அரசு விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப் படுவதாக புகாரையடுத்து, மாவட்ட ஆட்சி யர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சாந்திக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், மொரப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் அரசு மகளிர் விடுதிக்கு புதனன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப் படும் உணவுகள் தரம், உணவு இருப்பு வைப்பு அறையில் உள்ள பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாணவிகளின் கல்வி திறனை மேம்படுத்த அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் செய்திதாள்கள் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறதா? என் பதை குறித்தும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் விபரங் களை கேட்டறிந்தார். புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை தினசரி மாணவிகளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சகிலா, ரங்கநாதன், மற்றும் உதவி பொறியாளர் அன்பழகன், விடுதி காப் பாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம், ஆக.10- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிக ரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது. தற்போது காவிரி கரை யோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில், செவ்வாயன்று அணைக்கு விநாடிக்கு 4,107 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், புதனன்று அணைக்கு வரும் நீரின் அளவு 4,654 கன அடியாக இருந் தது. இந்நிலையில் வியாழனன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 5,026 கன அடி யாக அதிகரித்துள்ளது.
நாளை மின்தடை
ஈரோடு, ஆக.10- விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் வரும் சனி யன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் பெரிய வீரசங்கிலி, சின்னவீரசங் கிலி, கைக்கோலபாளை யம், வடமலைகவுண்டன்பா ளையம், கினிப்பாளையம், கிரே நகர், கரட்டூர் ஆகிய பகு திகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநி யோகம் இருக்காது.
சதுப்பு நிலத்தில் கொட்டப்படும் குப்பைகள்
உதகை, ஆக.10- உதகையிலுள்ள சதுப்பு நிலத்தில் குப் பைகள் கொட்டப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் சூழலியல் முக்கியத்து வம் வாய்ந்த மாவட்டமாக விளங்கி வருகி றது. உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பல் வேறு இடங்களிலும் சதுப்பு நிலங்கள் உள் ளன. இவை அரிய வகை பறவையினங்கள், சிறு சிறு உயிரினங்களின் புகழிடமாக உள் ளன. இந்நிலையில், சதுப்பு நிலங்களின் முக் கியத்துவம் குறித்து அறியாமல் பலரும், உத கையை சுற்றிலும் அவற்றில் கட்டட கழிவு கள், பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவற்றை கொட்டி வருகின்றனர். இதனால் சதுப்பு நிலங் கள் அழியக்கூடிய அபாயம் நீடிக்கிறது. உதகை நகராட்சிக்குட்பட்ட அண்ணா காலனி பகுதியில் இருந்து ரிச்சிங் காலனி செல்லும் பகுதி வரை சதுப்பு நில பகுதி உள்ளது. இப் பகுதியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளும் சதுப்பு நிலத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த சதுப்பு நில பகுதி அழியக்கூடிய அபாயம் ஏற்பட் டுள்ளதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வரு கிறது. எனவே, இங்கு முறையாக குப்பை களை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுப்பதுடன் சதுப்பு நிலத்தில் குப் பைகள் கொட்டாதவாறு விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஓவியங்கள்
கோவை, ஆக.10- கோவை - அவிநாசி சாலை மேம்பாலத் தில் வரையப்பட்டுள்ள குழந்தை தொழிலா ளர்கள் ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வு ஓவி யங்கள் அனைவரது கவனத்தை ஈர்த்துள் ளது. கோவை மாநகர் பகுதியில் உள்ள மேம் பால தூண்களிலும், சாலையோர சுவர்களி லும் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை மாநகரிலுள்ள மேம்பாலங்கள் மற்றும் தூண்களில் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் புகைப்படங் கள், பழைய நினைவுகளை நினைவுபடுத் தும் படங்கள், மக்கள் தலைவர்கள், விடுத லைப் போராட்ட வீரர்கள், விழிப்புணர்வு குறித் தான ஓவியங்கள் ஆகியவை வரையப்பட்டு வருகின்றன. அவிநாசி சாலை மேம்பா லத்தில் தொடர்ந்து சுவரொட்டிகள் ஒட்டப் பட்டு வருவது வாடிக்கையாக இருந்தது. இந் நிலையில், தற்போது அங்கு குழந்தை தொழி லாளர் ஒழிப்பு முறை குறித்தான விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. இவற்றை தனியார் கல்லூரி மாணவர்கள் வரைந்துள்ளனர். இந்த ஓவியங் கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆக.12ல் மக்கள் சிறப்பு நீதிமன்றம்
உதகை, ஆக.10- மக்கள் சிறப்பு நீதிமன்றம் 12 ஆம் தேதி நடைபெற உள்ள தாக நீலகிரி மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியும் ஆன அப்துல் காதர் கூறுகையில், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறி வுறுத்தலின்படி வருகின்ற சனிக்கிழமை 12ஆம் தேதி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இந்த நீதிமன்ற மக்கள் நீதிமன்றத்தில் பட்டா சம்பந்தமான வழக்கு கள் தீர்வுக்காக எடுக்கப்பட உள்ளது. எனவே, கூட்டு பட்டா, தனிப்பட்ட சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்ளவர்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.
ஆக.24ல் பட்டமளிப்பு விழா
கோவை, ஆக.10- பாரதியார் பல்கலையில் 38ஆவது பட்டமளிப்பு விழா, வரும் ஆக.24 ஆம் தேதி நடக்கவுள்ளது. 2021-22ஆம் ஆண்டு, பட்டப்படிப்பை முடித்த மாண வர்கள், அந்தந்த கல்லுாரி முதல்வர்களிடம் விண்ணப்பங் களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். பல்கலை இணையதளத்திலும் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து, வரும், 20ம் தேதிக்குள் விபரங்களை பூர்த்தி செய்து சமர்ப் பிக்க வேண்டும். பிஎச்டி, 2022 மே 11 முதல் 2023, ஆக.10ஆம் தேதி வரை முடித்து சென்றவர்கள், விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎச்டி, மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆக.14 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.