உடுமலை, ஏப்.26- உடுமலை தாலுகா கணக்கம்பா ளையம் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்த தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்த்தில் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், பொள் ளாச்சி அடுத்த புள்ளநாயக்கம் பட்டி, பனைமரத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (38). இவர் திருப்பூர் மாவட்டம் உடு மலை தாலுகா கணக்கம்பாளை யம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், கடந்த ஏப்.23 ஆம் தேதி தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரை களை உட்கொண்டுள்ளார். இத னையடுத்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கருப்புசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவ மனையில் அவரது தாயார் சேர்த் துள்ளார். ஆனால், சிகிச்சை பல னின்றி கருப்புசாமி உயிரிழந்து விட் டார். இதையடுத்து, கோமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த னர். இந்நிலையில் கருப்பசாமி மரண வாக்குமூலம் எழுதி வைத்து விட்டு உயிரிழந்தது தெரியவந்துள் ளது. அதில், தனது சாவுக்கு காரணம் கிராம உதவியாளர் சித்ரா மற்றும் மக்கள் மித்திரன் ஆசிரியர் மணி யன் ஆகிய இருவரும் தான் பொறுப்பு. கடந்த ஓராண்டுகளாக இவர்கள் இருவரும் பல இன்னல் களை கொடுத்து வந்தனர். அதை யும் தாண்டி கிராம பொதுமக்க ளுக்கு பல நன்மைகளை செய்து வந்தேன். இந்நிலையில் வேண்டு மென்றே என் மீது மிகப்பெரிய கலங்கத்தை ஏற்படுத்தி விட்டனர். பொது இடத்திற்கு எங்கு சென்றா லும் அவப்பெயருடன் சுற்றிவரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதால் மனம் உடைந்து விட்டேன். என் உயிரினும் மேலான விஏஓ பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது காவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் வேதனையுடன் எனது உயிரை விடுகிறேன் என எழுதி வைத்திருந்தார். இதனையடுத்து கணக்கம்பா ளையம் கிராம நிர்வாக அலுவல ரின் மரண வாக்குமூலத்துடன், உற வினர்கள் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண் ணனை புதனன்று சந்தித்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் மனு அளித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் சார்பிலும், பணம் கேட்டும் மிரட்டும் போலி நிரு பர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்திருந்தனர். இந்நிலையில், கிராம உதவியா ளர் பத்திரிக்கையின் ஆசிரியர் மணி யன் ஆகிய இரு வரையும் இது வரை கைது செய்ய காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என உடுமலை வட்டாச்சியர் அலுவலகத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் கூட்டமைப்பின் தலைவர் சீனி பாண்டியன் தலைமையில் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமா றன் மற்றும் வட்டாச்சியர் சுந்தரம் போராட்டம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளி களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியாக இருப்பதாக அவர்களிடம் தெரிவித்தால் போராட்டம் தொடர்ந்து நடைபெற் றது. இது குறித்து செய்தியாளர்களி டம் பேசிய கிராம நிர்வாக அலு வலர் கூட்டமைப்பின் தலைவர் சீனி பாண்டியன் தனது தற்கொலைக்கு காரணம் இந்த இரண்டு நபர்கள் என தனது கைப்பட எழுதிய கடி தம் கிடைத்து இரண்டு நாட்க ளுக்கு மேல் ஆன நிலையில் குற்றா வளிகளை கைது செய்ய எவ்வித நட வடிக்கையும் எடுக்காத நிலையில் உடுமலை வட்டாச்சியர் அலுவல கத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு சார் பில் காத்திருப்பு போராட்டம் நடை பெறும் நிலையில் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் திங்கட்கிழமை முதல் மாநிலம் முழு வதும் போராட்டம் நடைபெறும் என் றார்.