districts

img

மேற்கு மண்டல டிஐஜி-யாக விஜயகுமார் பொறுப்பேற்பு

கோவை, ஜன.6- மேற்கு மண்டல காவல் துறை துணைத்தலைவராக விஜயகுமார் வெள்ளியன்று பொறுப்பேற்றார்.  மேற்கு மண்டல காவல் துறை துணைத்தலைவராக பணியாற்றி வந்த முத்து சாமி, பணிமாறுதல் பெற்ற தைத்தொடர்ந்து, புதிய காவல் துறை துணைத்தலைவராக விஜயகுமார் நியமிக் கப்பட்டார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு  ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை  பணியில் இணைந்தார். காஞ்சிபுரம், கடலூர்,  நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர்  மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி யுள்ளார். இதனிடையே சென்னையில்  அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு  பதவி உயர்வு வழங்கப் பட்டது. இதன் அடிப்படை யில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அலுவ லகத்திற்கு வந்த விஜய குமார் கோப்புகளில் கையெ ழுத்திட்டு மேற்கு மண்டல  காவல்துறை துணைத்  தலைவராக பொறுப் பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் கொத்துக்களை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது, பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து, அதற்கு தீர்வு  வழங்கி மக்களை திருப்பதியாக வைத்தி ருப்பதே எங்கள் நோக்கமாக இருக்கும் என்று விஜயகுமார் தெரிவித்தார்.