districts

img

“நாங்கள் ஆளப்பிறந்தவர்கள், உலகை ஆள்வோம்” மகளிர் தின உறுதியேற்பு

தருமபுரி, மார்ச் 8- சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் எழுச்சிகரமான கொண்டாட்டங்கள் நடைபெற்றது. சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக்குழு சார்பில், உலக மகளிர் தின கருத்தரங்கம் சிஐடியு தருமபுரி மாவட்டக்குழு அலுவலகத்தில் வெள் ளியன்று நடைபெற்றது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட கண்வீனர் சி.கவிதா தலைமை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப் பாளர் எஸ்.தேவமணி, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் சி.கலாவதி, மாவட்ட துணைத்தலைவர் சி.அங்கம்மாள் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட் டச் செயலாளர் பி.ஜீவா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  ஈரோடு சிஐடியு ஈரோடு மாவட்டக்குழு சார் பில், விபி.சிந்தன் நினைவகத்தில் சர்வ தேச மகளிர் தின கருத்தரங்கம் நடை பெற்றது. இக்கருத்தரங்கிற்கு உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு வின் மாவட்ட அமைப்பாளர் பி.ஸ்ரீதேவி தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச். ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக்குழு மாநில இணை அமைப் பாளர் ஆர்.மாலதி சிறப்புரையாற்றி னார். எஸ்.கோமதி நன்றி கூறினார். கோவை தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், கோவை, தாமஸ் கிளப்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, சங் கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் வி.ஆர்.சாந்தாமணி தலைமை வகித் தார். மேலும், மாவட்டத் தலைவர் எஸ். மதன், மாதர் சங்கத்தின் மாநிலப் பொரு ளாளர் பிரமிளா, மாவட்டச் செயலாளர் சுதா என பலர் கலந்து கொண்டனர். இறு தியில்,காந்திமதி நன்றி கூறினார். முன்னதாக மகளிர் தின கொண் டாட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பணியிடங் களில் பெண்களின் பாதுகாப்பை உறு திப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதிய சட்டத்தை கறாராக அமல்ப டுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்து ணவு, மக்களை தேடி மருத்துவம், ஆஷா பணியாளர்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் இயற்ற  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஹேக்கத்தான் போட்டி 

சூலூர் அடுத்த கண்ணம்பாளையத் தில் செயல்பட்டு வரும் கலைஞர் கரு ணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் மக ளிர் தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங் களில் இருந்து கல்லூரி மாணவிகள்  மட்டும் பங்கேற்ற “ஹேக்கதான் 2024’’ போட்டிகள் வெள்ளியன்று நடைபெற் றது. இந்த போட்டியினை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந் தர் கீதாலட்சுமி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கல்லூரி தலைவர் இந்து முருகேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், மாணவி கள் தங்களது ஏராளமான கண்டுபிடிப்பு களை இந்த போட்டியில் காட்சிப்படுத்தி னர். அட்மையா பல்கலைக்கழகத்தின் கௌரவ தலைவர் சீலா ராமச்சந்திரன், தசால்ட் சிஸ்டம் நிறுவனத்தில் துணைத் தலைவர் ரவிக்குமார், கொடிசியா அமைப்பின் தலைவர் திருஞானம், இந் தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மண்டல மேலாளர் விஜயா ஆகியோர் மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு களை பார்வையிட்டனர். அப்போது  நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக ளின் செயல் விளக்கம் குறித்து மாணவி களிடம் கேட்டறிந்தனர். 

ஆட்சியர் உற்சாக நடனம்

உதகை அரசு தாவரவியல் பூங்கா வில், சர்வதேச மகளிர் தினம், மாவட்ட மகளிர் திட்டத்துறை மூலம் கொண்டா டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட  ஆட்சியர் அருணா கலந்து கொண்டார். இதேபோல் கல்லூரி மாணவிகள், அரசு துறைகளில் பணிபுரியும் பெண்கள் மற் றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண் டனர். இக்கொண்டாட்டத்தின் போது, பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டன. குறிப்பாக, நிகழ்ச்சியில் படுகு மொழி பாடலுக்கு சுற்றுலாப் பயணிகள், அப் பகுதி பெண்கள் என பலர் நடனமாடி னர். அவர்களுடன், மாவட்ட ஆட்சியர்  அருணா, வருவாய் அலுவலர் கீர்த்தி  பிரியதர்ஷினி என அரசு அலுவலர்கள்  பலரும் சேர்ந்து உற்சாக நடனமாடி னர்.  சேலம்  சர்வதேச மகளிர் தினத்தை முன் னிட்டு, எல்ஐசி காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்டம் மற்றும் கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, பள்ளி நூலகத் திற்காக ரூ.35 ஆயிரம் மதிப்பிலான புத் தகங்களை, சேலம் மாவட்டம், கொண் டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் துணைத்தலைவர் தர்மலிங் கம், கலைச்செல்வி ஆர்.கே.லால் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோட்டில் உள்ள ஜவுளி நிறுவனத்தின் சார்பில், உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, நகராட்சியில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பெண்  பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற் றும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி, கொக்க ராயன்பேட்டையில் நடைபெற்றது.