அவிநாசி, நவ.6- பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏதுவாக காலை மற்றும் மாலை நேரங்களில் அனைத்து கிராமங்க ளுக்கும் செல்லும் வகையில் பேருந் துகளை இயக்க கோரி ஞாயிறன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் புதுப்பாளையம் ஊராட்சி கிளை கள் சார்பில் கவுண்டம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இருசக் கர வாகன பிரச்சாரம் நடைபெற் றது. வஞ்சிபாளையம் உயர்நிலைப் பள்ளியினை மேல்நிலைப் பள்ளி யாகத் தரம் உயர்த்த வேண்டும். பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ மாணவிகளுக்கு ஏதுவாக காலை மற் றும் மாலை நேரங்களில் அனைத்து கிராமங்களுக்கும் செல்லும் வகை யில் பேருந்து இயக்க வேண்டும். கோவிட் காலத்தில் நிறுத்தப்பட்ட புதுப்பாளையம் செல்லும் பேருந்து எண் 29ஐ மீண்டும் இயக்க வேண் டும் உட்பட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் இரு சக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடு பட்டனர். வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஹனிபா தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சார பயணத்தை வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலை வர் செ.முத்துகண்ணன் கொடிய சைத்து துவக்கி வைத்தார். இந்த பிரச் சாரப் பயணம் புதுப்பாளையம் கும ரவேல், பாலசுப்பிரமணியம், தேவிகா, ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள், வாலிபர் சங்கத்தின் கிளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது. இதைத்தொ டர்ந்து வஞ்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் வாலிபர் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் மணிகண்டன், ஒன் றிய கவுன்சிலர் முத்துசாமி, விவசா யச் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வெங்கடாசலம், சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் அவிநாசி செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, வாலிபர் சங்கத்தின் முன் னாள் மாவட்டப் பொருளாளர் பழனிச் சாமி, முன்னாள் ஒன்றிய பொருளா ளர் மோகனசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முரு கன், சாமியப்பன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தினக ரன், மாதர் சங்க ஒன்றிய செயலா ளர் செல்வி, மாவட்ட குழு உறுப்பினர் கள் வடிவேல், நவநீதன், இந்திய மாணவர் சங்கத்தின் ஒன்றிய செய லாளர் மணிகண்டன், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர். 12 இடங்க ளில் பிரச்சாரம் செய்தனர். இதில் உடு மலை துரையரசன் கலைக்குழுவின் அரங்கேற்றம் நடைபெற்றது.