districts

img

அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டம்

தருமபுரி, டிச.20- சட்டமேதை அம்பேத்கரை அவ மதித்த அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, பல்வேறு அமைப்பி னர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின்  சிற்பி, அண்ணல் பாபா சாகேப் அம் பேத்கரை நாடாளுமன்றத்தில் அவ மதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித் தும், அவர் அமைச்சர் பதவியிலி ருந்து உடனடியாக விலக வலியு றுத்தியும் நாடு முழுவதும் பல் வேறு அமைப்பினர் தொடர் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தருமபுரி மாவட்டம், அரூர் ரவுண் டானா அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.குமார் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட் டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுனன், விசிக பொறுப்பா ளர்கள் கேசவன், ஞானசுடர், ஆனந் தன், திமுக தலைமை கழக பேச்சா ளர் மணி, மதிமுக ஒன்றியச் செயலா ளர் வேலாயுதம், நகரச் செயலாளர் சுப்பிரமணி, சிபிஐ ஒன்றியச் செய லாளர் அல்லிமுத்து, காங்கிரஸ் நிர் வாகி சி.கே.ஆர்.செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று, அமித்ஷாவைக் கண் டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், கடத்தூர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. வட்டச் செயலா ளர் குப்பன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் எம்.அருள்குமார், மாவட் டத் தலைவர் குறளரசன், வட்டத்  தலைவர் குமரேசன், துணைத் தலைவர் முனியப்பன், துணைச் செயலாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வட் டப் பொருளாளர் ராகப்பிரியா நன்றி  கூறினார்.  சேலம் சேலம் நீதிமன்றத்தில் குற்றவி யல் வழக்கறிஞர்கள் சங்கத்தின்  சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் தலைவர் இமய வர்மன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் செயலாளர் முருகன், பொருளாளர் கண்ணன் உட்பட ஏரா ளமான வழக்கறிஞர்கள், அம்பேத் கரின் புகைப்படத்துடன் கலந்து கொண்டனர்.