நாமக்கல், ஜூலை 11- கொல்லிமலையில், ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரு தினங்களில் வல்வில் ஓரி விழா நடைபெற உள்ளதென ஆட்சி யர் ச.உமா அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற் றும் மலர் கண்காட்சி ஆகிய விழாக் களை கொண்டாடுவதற்கான ஆலோச னைக்கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.உமா பேசுகையில், கடையேழு வள் ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி அவர் களை போற்றிடும் வகையில், ஆண்டு தோறும் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதே போல் இந்த ஆண்டும் வரும் ஆகஸ்ட் 2, 3 ஆகிய 2 நாட்கள் கொல்லிமலை யில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதைத்யொட்டி அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக் கப்பட வேண்டும். காவல் துறையினர் காரவள்ளியில் சோதனைச்சாவடிகள் அமைத்து, கொல்லிமலை மலைப் பாதையில் லாரி மற்றும் கனரக வாக னங்கள் செல்வதை தடை செய்திட வும், இருசக்கர வாகனங்களில் தலைக வசம் அணியாமல் வருபவர்களை அனு மதிக்கக்கூடாது. பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் சோதனை மேற் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விழா நடைபெறும் 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற் பாடு செய்திட வேண்டும். ஊரக வளர்ச் சித்துறையினர் கொல்லிமலையிலுள்ள முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள் ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்திட வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.