நாமக்கல், ஆக.4- கொல்லிமலையில் 2 நாட்கள் நடைபெற்ற வல்வில் ஓரி விழா சனி யன்று நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, சிறந்த அரங்கங்க ளுக்கு ஆட்சியர் சான்றிதழ், கேடயங்களை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையில் சனியன்று நடைபெற்ற வல்வில் ஓரி நிறைவு விழாவில், ஆட்சியர் ச.உமா, சட்டமன்ற உறுப் பினர் கு.பொன்னுசாமி ஆகியோர், 460 பயனாளிகளுக்கு ரூ.14.79 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து, வில்வித்தை போட்டி யில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, கலைநிகழ்ச்சிகள் நடத்திய கலை குழுவினர் மற்றும் மாணவ, மாண வியர்களுக்கு, சிறந்த அரங்கங்கள் அமைத்த அரசு துறையினருக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினர். அப்போது ஆட்சியர் ச. உமா பேசுகையில், கொல்லிமலை யின் இயற்கையை பாதுகாத்திட சுற்றுலாத்துறைக்கு ரூ.2 கோடியில் விரிவான திட்டமதிப்பீடு உருவாக் கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இப்பகுதி சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில், மாதிரி அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய பேட்டரி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இத்திட் டத்தை அதிகளவில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் வனத் துறை சார்பில் விரிவாக்கம் செய் திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கிறது. இப்பகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வ ரிடம் தெரிவிக்கப்பட்டு, நிறைவேற் றப்படும் என உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து, வல்வில் ஓரி விழாவில் அமைக்கப்பட்டி ருந்த பல்வேறு துறைகளின் கண் காட்சி அரங்குகள் மற்றும் தாவரவி யல் பூங்காவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் வண்ண மலர்க ளால் அமைக்கபட்டிருந்த மலர் கண்காட்சி ஆகியவற்றை பார்வை யிட்டார். இந்நிகழ்ச்சியில் கொல்லி மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அ.மாதேஸ்வரி, மாவட்ட வன அலுவலர் ச.கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவ லர் தே.ராம்குமார், மாவட்ட சுற் றுலா அலுவலர் மு.அபராஜிதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (பொ) இ.கார்த்திகா, பழங்குடியினர் திட்ட அலுவலர் தே.பீட்டர் ஞானராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.