districts

img

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க்கண்காட்சி துவங்கியது!

நாமக்கல், ஆக.2- கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலர்க் கண்காட்சி ஆகியவை வெள்ளி யன்று துவங்கியது. நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில், வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகி றது. அந்த வகையில், நடப்பாண் டில் கொல்லிமலை செம்மேடு வல் வில்ஓரி அரங்கில், வல்வில்ஓரி விழா மற்றும் சுற்றுலா விழாவும், வாசலூர்பட்டி தாவரவியல் பூங்கா வில் மலர்க்கண்காட்சி தொடக்க விழாவும் வெள்ளியன்று நடை பெற்றது. சேந்தமங்கலம் சட்ட மன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி மலர்க்கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன்பி றகு வல்வில் ஓரி அரங்கத்தில் நடை பெற்ற சுற்றுலா விழாவில், பல் வேறு அரசுத்துறைகள் சார்ந்த 22 அரங்குகளை அவர் திறந்து வைத் தார். தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பி னர் மற்றும் அதிகாரிகள், வல்வில்ஓ ரியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். கொல்லிமலை பழங்குடியின மக்க ளின் சேர்வை ஆட்டம் மற்றும் கண்க வர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற் றன. மலர்க்கண்காட்சி  கொல்லிமலை தாவரவியல் பூங்காவில், தோட்டக்கலைத் துறை சார்பில், 50 ஆயிரம் ரோஜாக் களால் யானை, ஆக்டோபஸ், நண்டு, மீன், சிப்பி, காதல் சின்னம், பட்டாம்பூச்சி, தானியங்களால் மக்களுடன் முதல்வர், காய்கறிக ளால் பட்டாம்பூச்சி, மயில்போன் றவை வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும், 20 ஆயிரம் மலர்களை கொண்டு பல்வேறு வகைஅலங்கா ரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியில், ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், ஆந்தூரி யம், ஜிப்சோபில்லம் சாமந்தி, ஆர்கிட், லில்லியம், ஹெலிகோனி யம், சொர்க்கப்பறவை, கிளாடி யோஸ், டெய்ஸி, சம்பங்கி ஆகிய மலர்களும் இடம் பெற்றுள்ளன. இவ்விழாவில், நாமக்கல் கோட் டாட்சியர் ஆர்.பார்த்திபன், கொல் லிமலை ஊராட்சி ஒன்றியத் தலை வர் அ.மாதேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இ.கார்த்திகா, அரசுத்துறை அலுவலர்கள், பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவி கள், சுற்றுலாப் பயணிகள்  உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.