districts

img

150 கலப்பின கன்றுகளுக்கு தடுப்பூசி

கோபி, நவ.19- ஈரோடு மாவட்டத்தில் ஆவின் சார்பில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்க ளில் உறுப்பினர்களாக உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளிடையே வம்சாவளி சோதனை திட்டத்தில் கலப்பின கால்நடைகளின் மூலம் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படை யில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள  பெருமுகையில் கலப்பின கன்று முகாம் நடை பெற்றது. இம்முகாமில் ஆவின் பொது மேலாளர் பழனிச்சாமி, மாவட்ட திட்ட  ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனை களை வழங்கினர். இதனைத்தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட 150க்கும் மேற் பட்ட ஜெர்சி கலப்பின கன்றுகளுக்கு குடற் புழு நீக்கம், கருச்சிதைவு தடுப்பூசி செலுத் தப்பட்டது. இம்முகாமில் கால்நடை மருத்து வர்கள், கால்நடை உதவியாளர்கள், விவசா யிகள், கால்நடை வளர்ப்போர்கள் என பலர் கலந்து கொண்டனர்.