காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்ககைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டத் தலைவர் சி. தனபால், முன்னாள் மாநில பொதுச் செயலாளர் டி.சிவஜோதி, மாநிலச் செயலாளர் ப. செந்தில் குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.