ஈரோடு, நவ.10- மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு நகரச் செயலாளராக வி. பாண்டியன் தேர்வு செய்யப்பட் டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு நகர 11 ஆவது மாநாடு வி.பி.சிந்தன் நினைவகத்தில் அமைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி, தோழர் என்.சங்கரய்யா நினை வரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டு கொடியை மூத்த தோழர் வடிவேலு ஏற்றி வைத்தார். பி.கனகராஜ், வி.பி.சிவக் குமார் மற்றும் ஆர்.சந்திரா ஆகியோர் தலைமை வகித்தனர். நகரக்குழு உறுப்பி னர் என்.செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகே சன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற் றினார். நகரச் செயலாளர் பி.சுந்தரராஜன் அறிக்கையை முன்வைத்தார். இம்மாநாட் டில், தந்தை பெரியார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட தேவையான உபகரணங்கள் வழங்க வேண் டும். மக்கள் தொகைக்கேற்ப கூடுதல் மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். மாநகரத் தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் இன் னும் சரி செய்யப்படாமல் உள் ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். ஈரோடு மாந கராட்சியில் மக்கள் தொகைக் கேற்ப தூய்மைப் பணியாளர் களை நியமித்து, ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். போக்குவரத்து நெரி சலைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து, கட்சியின் ஈரோடு நகரச் செயலாளராக வி.பாண்டியன் மற்றும் 9 நகரக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோமதி நிறைவுரையாற்றினார். முடிவில், சிவஞானம் நன்றி கூறினார்.