districts

img

சிபிஎம் சேலம் மின்னரங்க கமிட்டிச் செயலாளராக வீ.இளங்கோ தேர்வு

சேலம், அக்.27- மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட மின்னரங்க கமிட்டிச் செயலாளராக வீ.இளங்கோ தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம்  மாவட்ட மின்னரங்க கமிட்டி 10  ஆவது மாநாடு ஞாயிறன்று, பி.கே.சிவக்குமார், கே.எஸ்.பிரபு பாலாஜி ஆகியோர் தலைமையில், மேட்டூர் அனல் மின் நிலைய அலுவலகத்தில்  நடைபெற்றது. இடைக்கமிட்டி உறுப்பினர் பி.கருப்பண் ணன் செங்கொடியை ஏற்றி வைத்தார். இடைக் கமிட்டி உறுப்பினர் கே.சுந்தர்ராஜன் வரவேற் றார். இடைக்கமிட்டி உறுப்பினர் எல்.செல்வ நாதன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். அறிக்கையை இடைக்கமிட்டி செயலாளர் வீ.இளங்கோ முன்வைத்தார். இம்மாநாட்டில், மின் ஊழியர்களின் உரிமைகள் பாதிக்காத  வகையில் அரசாணை எண் எண்:100இல் பொருத்துமான திருத்தத்தை செய்ய வேண்டும்.  மின்வாரியத்தை தனியார்மயப் படுத்தும் அரசாணைகள் 6, 7 மற் றும் 32யை திரும்பப்பெற வேண் டும். மேட்டூர் அனல் மின் நிலை யத்தில் வெளியாகும் உலர் சாம் பலை கொண்டு அரசே சிமெண்ட் ஆலை  நிறுவி, அப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் சேலம்  மாவட்ட மின்னனரங்க கமிட்டிச் செயலாள ராக வீ.இளங்கோ உள்ளிட்ட 7 இடைக்கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்.ரமணி  நிறைவுரையாற்றினார். இடைக்கமிட்டி உறுப்பினர் வீ.ரகுபதி நன்றி கூறினார்.