districts

புலி நடமாட்டத்தால் மூடப்பட்ட உதகை பைன் பாரஸ்ட் திறப்பு

உதகை, ஜூன் 23- புலி நடமாட்டத்தால், சுற்றுலாப் பயணி கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்ட உதகை பைன் பாரஸ்ட் சுற்றுலாப்பகுதி மீண்டும் திறப் பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ‘மலைகளின் அரசி’ என்று அழைக்கப்ப டும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலாத்  தலமாகும். இங்குள்ள சுற்றுலாத் தலங்களை  கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்று லாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், உதகையில் அமைந்துள்ள முக் கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று பைன்  பாரஸ்ட். கேரளம், கர்நாடகா உட்பட  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலி ருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இப்ப குதிக்கு வருகை புரிந்து இயற்கை காட்சி களை கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு,  சூழல் சுற்றுலா மையத்திற்கு செல்லக்கூடிய  சாலையையொட்டி அமைந்துள்ள வனப்பகுதிக்குள் புலி ஒன்று ஓய்வெடுத்தி ருப்பதை அவ்வழியாக சென்ற சுற்றுலாப் பய ணிகள் கண்டுள்ளனர். இதையடுத்து சூழல்  சுற்றுலா மையத்தில் உலாவரும் புலி நட மாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக் கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலை யில், மீண்டும் சூழல் சுற்றுலா மையத்தில்  புலி உலா வந்ததால், அங்கு பணிபுரியும் ஊழி யர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, அங்கிருந்தவர்களை உட னடியாக வனத்துறையினர் வெளியேற்றி, பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தை தற்காலிகமாக மூடினர். மேலும், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு, வாகனங்களும் நிறுத்தக்கூடாது என வனத் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து கால்  தடங்களை வைத்து புலியின் நடமாட்டத்தை  கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தை கண்டு ரசிக்க வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள், புலி நடமாட்டத்தால் உடனடியாக வெளி யேற்றப்பட்டது ஏமாற்றமளிப்பதாக தெரி வித்தனர். இந்நிலையில் வனத்துறை பாது காப்புடன் சுற்றுலாப் பயணிகள் பைன் பாரஸ்ட் பகுதிக்கு செல்ல ஞாயிறன்று அனு மதியளிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சிய டைந்த சுற்றுலாப் பயணிகள், இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.