உதகை, டிச.14- மேட்டுப்பாளையம் - உதகை இடையே யான மலைரயில் சேவை, 22 நாட்கள் இடை வெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கப் பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். மேட்டுப்பாளையத்திலிருந்து உத கைக்கு தினசரி மலை ரயில் சேவை இயக் கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், இதில் அதிகம் பயணித்து வருகின்றனர். இந்நிலை யில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்க ளில் அண்மையில் பெய்த கனமழை காரண மாக மலை ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து ரயில் பாதை சேதமானது. இதனால் மேட்டுப்பாளையத் தில் இருந்து உதகை வரை இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து கடந்த 22-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலை யில், சீரமைப்புப் பணிகள் நிறைவடைந் ததை தொடர்ந்து, தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 22 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட நீலகிரி மலை ரயில் சேவை வியாழனன்று மீண்டும் தொடங்கியது. இத னால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந் தனர். மேலும், ரயில் முன்பு நின்று புகைப் படம் எடுத்துக்கொண்டனர்.