மேட்டுப்பாயைளம், ஆக.25- மேட்டுப்பாளையத்தில் இயக்கப் பட்டு வரும் மலைரயில் சேவை வரும் ஆக.31 ஆம் தேதி வரை ரத்து செய்யப் படுவதாக ரயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது. கடந்த ஆக.1 ஆம் தேதியன்று அதி காலை பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையே உள்ள மழை ரயில் தண்டவாள பாதை யில் மண் சரிவு ஏற்பட்டு நீலகிரி மலை ரயில் சேவை தடைபட்டது. சீரமைப் புப் பணிகள் நடைபெறுவதால் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப் படுவதாக ரயில்வே நிர்வாகம் ஏற்க னவே அறிவித்திருந்தது. இந்நிலை யில், திட்டமிட்டபடி சீரமைப்புப் பணி கள் நிறைவடையாத காரணத்தால் தொடர்ந்து மேட்டுப்பாளையம் - குன் னூர் இடையேயான மலைரயில் சேவை ரத்து நீடிக்கப்பட்டுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந் நிலையில், சீரமைப்புப் பணிகள் முடி யாத காரணத்தினால் ஞாயிறன்று வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனி டையே, திங்கள்கிழமை (இன்று) முதல் வழக்கம் போல் மலை ரயில் இயக்கப் படும் என்று சுற்றுலாப் பயணிகள் எதிர் பார்த்து இருந்தனர். ஆனால், வானிலை மையம் விடுத்துள்ள கனமழை எச்ச ரிக்கை மற்றும் சில இடங்களில் அவ்வப் போது தொடர்ந்து ஏற்படும் சிறு சிறு மண் சரிவுகளால் மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் சேவை வருகின்ற 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப் பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது.