திருப்பூர், நவ. 8- திருப்பூரில் பருவமழை மற்றும் தட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு மக்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை தற்போது அதிக ரித்து இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நான்கு மண்டலங்களிலும் தொடர் ந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. இந்த முகாம்களில் சிகிச்சை பெற வருவோருக்கு பாராசிட்டமால் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படு கின்றன. அதேசமயம் கடுமையாக பாதிக்கப் படுவோருக்கு ரத்த பரிசோதனை செய்வது. தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படு வதில்லை என்றும் பொதுமக்கள் கூறுகின் றனர். இப்போது வரக்கூடிய காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் உடல் வெப்பம் மற்றும் கடுமை யான உடல் வலி, சளி, இருமல், மூக்கடைப்பு என பல்வேறு உபாதைகளை ஏற்படுத்து கிறது. வழக்கமாக இரண்டு, மூன்று நாட்க ளில் காய்ச்சல் சரியாகும். ஆனால் தற்போது பரவி வரும் காய்ச்சல் குறைந்தது 5 முதல் 8 நாட்கள் வரை நீடிப்பதாக பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர். தற்போது வரக்கூடியது ப்ளூ காய்ச்சல் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த காய்ச்சலில் பாதிக்கப்படுபவருக்கு உடல் தொந்தரவு அதிகமாக இருந்தாலும் குறிப் பிட்ட நாட்களில் குணமடைந்து விடுவார் கள். அஞ்ச வேண்டியது இல்லை என்று அவர் கள் கூறுகின்றனர்.
அதேசமயம் இந்த சூழ்நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித் துள்ளதாக மருத்துவ வட்டாரத்தில் கூறுகின் றனர். இதுகுறித்து நலம் ஹோமியோ மருத்து வமனை மருத்துவர் திருவேங்கடம் கூறுகையில், காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது. ப்ளூ காய்ச்சலுடன், டெங்கு காய்ச்ச லும் பரவும் நிலை உள்ளது. எனவே அரசு நிர்வாகம் கடந்த காலத்தைப் போல அனைத் து பகுதிகளிலும் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் முகாம்களை நடத்தி பொதுமக்க ளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது பரவக்கூடிய காய்ச்சலில் பாதிக்கப்படுவோருக்கு தட்டணுக்கள் எண்ணிக்கை வேகமாக குறைகிறது. அதற்கு உரிய மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். பப்பாளி இலைச்சாறு நல்ல மருந்தாக பயன்படுகிறது, இது மருந்து வடி வத்திலும் விற்பனைக்கு உள்ளது என்றும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இதை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித் தனர். பொதுவாக கழிவு நீர் மற்றும் நன்னீர் தேங்கி இருப்பதை உடனடியாக அப்புறப்ப டுத்த வேண்டும். சுற்றுப்புற சூழல் சுத்தமாக இருப்பதற்கு தூய்மை பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மேற் கொள்ள வேண்டும். குடிநீர் விநியோகம் சீராக இருந்தால் ்பொதுமக்கள் பல நாட்க ளுக்கு குடிநீரை தேக்கி வைக்க வேண்டிய நிலை இருக்காது. எனவே அனைத்து பகுதி களுக்கும் சீரான இடைவெளியில் போது மான அளவு குடிநீர் விநியோகம் செய்வதை மாநகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டு காலமாகவே, திருப்பூர் டெங்கு காய்ச்சல் பாதிக்கும் முக்கியமான பகுதியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இதில் மாநகராட்சி நிர்வாகம், சுகா தாரத் துறை போதிய முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.