சேலம், பிப்.21- சேலம் அரசு இருபாலர் கலைக் கல்லூரி ஆவின் உணவகத்தில் இரட்டை குவளை முறை கடை பிடிக்கப்படுவதாகவும், இதுகு றித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவர் கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் அரசு இருபாலர் கலைக் கல்லூரி மாநகரத்தின் மையப்பகுதி யில் அம்பேத்கர் சிலை அருகில் அமைந்துள்ளது. 1857 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கல்லூரி நூற் றாண்டுகளைக் கடந்து, 2007 முதல் தன்னாட்சி பெற்ற கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. சேலம் பெரி யார் பல்கலைக்கழகத்தின் இணை வைப்பெற்ற மிகப்பெரிய பழமை வாய்ந்த இக்கல்லூரி சேலம் மாவட் டத்தின் அடையாளமாக இருந்து வருகிறது. 5580 மாணவ, மாணவி களுடன், 234 ஆசிரியர்கள், பணியா ளர்களை கொண்டு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (NAAC) மூலம், “B கிரேடு” தர வரிசையில் இரு சுழற்சி முறையில் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரு கின்றனர். இக்கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக பணி யாளர்களுக்கு என ஆவின் உணவ கம் செயல்பட்டு வருகிறது. இந்நி லையில், இந்த ஆவின் உணவகத் தில் மாணவர்களுக்கு பேப்பர் டம்ள ரிலும், ஆசிரியர்களுக்கு சில்வர் டம் ளரிலும் தேநீர் வழங்கும் முறையை உணவக உரிமையாளர்கள் கடைப் பிடித்து வருகின்றனர். இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் மிகப்பெ ரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இதுசம்பந்தமாக கல்லூரி மாண வர்கள் சிலர் உணவக பணியாளர் களிடம் கேட்டபோது, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததால் இப்படி செய்கிறோம் என மழுப்ப லான பதிலை தெரிவித்துள்ளனர். இந்த இரட்டை குவளை முறைக்கு மாணவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இரட்டை குவளை முறையில் தேநீர் வழங்கு வது பேராசிரியர்கள், மாணவர்க ளின் நட்புணர்வை சீர்குலைக்கும். எனவே, சமூக நீதியை நிலைநாட் டிட ஆட்சியாளர்கள் இதுபோன்ற சம்பவங்களை கண்டறிந்து, களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.