திருப்பூர், பிப். 20 – தாராபுரம் வட்டம் குண்டடம் ஒன்றி யத்தில் பட்டியலின விதவைப் பெண் ணை சாதியைச் சொல்லி திட்டி அவமா னப்படுத்தியவர்கள் மீது காவல் துறை யினர் தீண்டாமை வன்கொடுமை தடுப் புச் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகாச் செயலாளர் என்.கனகராஜ் விடுத்துள்ள செய்தியறிக்கை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா குண்டடம் ஒன்றியத் தில் பேட்டை காளிபாளையம் என்ற கிராமத்தில் மகேஸ்வரி என்ற பட்டிய லின விதவைப் பெண் வாழ்ந்து வருகி றார் அவர் அதே ஊரைச் சேர்ந்த மணி கண்டன், அவரது மனைவி சுகன்யா ஆகியோரிடம் ரூ.10ஆயிரம் கடன் பெற்றிருக்கிறார். அதில் ரூ.7 ஆயி ரத்தைத் திருப்பி செலுத்திவிட்டார். மீதி ரூ. 3ஆயிரம் தர வேண்டியுள்ளது. இந்நிலையில் மணிகண்டனும் அவ ரது மனைவி சுகன்யாவும் மகேஸ்வ ரியை சாதியைச் சொல்லி அவமானப்ப டுத்தி, கொடுத்த பணத்தைத் திருப்பித் தரமாட்டியா என்று பல தடவை, மிரட்ட லில் ஈடுபட்டு வந்தனர். அதன்பின் கடந்த 11ஆம் தேதி இரவு மகேஸ்வரியின் வீட் டுக்குச் சென்ற மணிகண்டனும், சுகன் யாவும் அத்துமீறி நுழைந்து அவர் வளர்த்த ஆட்டுக்குட்டியை பிடித்துச் சென்று விட்டனர். மகேஸ்வரி செய்வதறியாது திகைத்து நின்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தை நாடினார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியினர் நடந்த சம்பவத்தை எழுதி தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகேஸ்வரி உடன் புகார் மனு அளித்தனர். குண்டடம் காவல் ஆய்வாளர் விசாரிப்பார் என்று துணைக் கண்காணிப்பாளர் கூறினார். மூன்று நாட்களுக்குப் பிறகு செவ்வாயன்று 20ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. இதில் குண்டடம் காவல் துறையை சேர்ந்தவர்கள், ஆட்டுக்குட் டியை கொண்டு வந்து கட்டி விடு வார்கள் புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று மகேஸ்வரியிடம் கூறி யிருக்கின்றனர். அதேபோல் செவ்வாய் மாலை 5 மணிக்கு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்து அவரது வீட்டில் கட்டி விட்டார்கள். ஆனால் சாதியைச் சொல்லித் திட்டி அவமானப்படுத்தி யதற்கு குண்டடம் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த புகாருக்கு ரசீது 43/2024 கொடுத் துள்ளார்கள். ஆனால் அதில் மனுவில் குறிப்பிட்டுள்ள சாதியை சொல்லி திட்டி யது சம்பந்தமான எந்த விபரமும் இல்லை. எனவே ஏழை மக்கள் என்றால், அதுவும் பட்டியலின மக்கள் என்றால், என்னவெல்லாம் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆதிக்க மனநிலையோடு இருக் கிறார்கள். யாரும் இப்பிரச்சினையில் தலையிடக்கூடாது என்று சொல்லி ஊரில் மிரட்டுகின்றனர். குண்டடம் காவல்துறை உரிய முறையில் விசாரணை செய்து தீண் டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்து சம்பந் தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வ தாக, தாராபுரம் தாலுகாச் செயலாளர் என்.கனகராஜ் கூறியிருக்கிறார்.