districts

img

பழுதடைந்துள்ள மாணவிகள் விடுதியை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம், ஜூலை 6- பழுதடைந்துள்ள மாணவிகள் விடுதியை சீரமைக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சேலம்  வடக்கு மாநகரப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் வடக்கு மாநகரப்  பேரவை சுனில் மைத்ரா நினைவகத்தில் சனியன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் கே.டார்வின் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் அபிராமி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சே.பவித்ரன் துவக்க உரையாற்றி னார். மாணவர் சங்க தருமபுரி மாவட்டச் செயலாளர் ஸ்டாலின், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு மாநகரத் தலைவர் ராமச்சந்திரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் திரு நாவுக்கரசு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  சேலம் அண்ணா பூங்கா அருகே பழுதடைந்த நிலை யில் இயங்கி வரும் மாணவிகள் விடுதியினை சீரமைக்க வேண்டும். கோரிமேடு ஐடிஐ கல்லூரியிலிருந்து அரசு கலைக்கல்லூரி சேலம் -7 வழியாக வழியாக மாணவ, மாணவிகளுக்கான தனி சிறப்பு பேருந்து கூடுதலாக இயக்க வேண்டும். சேலம் அரசு கலைக்கல்லூரி வளா கத்தில் இயங்கி வரும் மாணவர் விடுதியில் ஊட்டச்சத் தான உணவு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து மாணவர் சங்கத்தின் வடக்கு மாநகரத் தலைவராக கமல்நாத், செயலாளராக எஸ். கோகுல்ராஜ் உள்ளிட்ட 17 பேர் கொண்ட கமிட்டி தேர்வு  செய்யப்பட்டது. முடிவில், மாணவர் சங்க மாநிலத் தலை வர் சம்சீர் அகமது நிறைவுரையாற்றினார். இதில் பள்ளி,  கல்லூரி மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.