தருமபுரி, நவ.25- புதிய ஊராட்சி ஒன்றியங்கள் தருமபுரி மாவட்டத்தில் உருவாக்க வேண்டும என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க தருமபுரி மாவட்ட பேரவை வலியுறுத்தியுள் ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி வின்சென்ட் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜி.சதீஸ் தலைமை ஏற்றார். ஆர்.ஆனந்த விஜியரங்கன் அஞ்சலி தீர்மா னத்தையும், ச.இளங்குமரன் வரவேற்றும் பேசினர். பேரவையை துவக்கிவைத்து மாநில துணைத்தலைவர் இரா.ஆறுமுகம் உரை யாற்றினார். செயலாளர் பா.சங்கர் வேலை அறிக்கையும், பொருளாளர் கு.சரவோத்த மன் வரவு செலவு அறிக்கையும் முன்வைத்த னர். முன்னதாக, தருமபுரி மாவட்ட ஆட்சி யர் கி.சாந்தி, ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் வளர்ச்சி கு.மரியம்ரெஜினா, தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் ஆகியோர் வாழ்த்தி உரை யாற்றினர். தருமபுரியில், குடிநீர் பிரச்சனையை நிரந் தரமாக தீர்க்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட் டம்-2 ஐ விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களின் அடிப்படை வசதிகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில், நல்லம் பள்ளி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து இண்டூர், அரூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து தீர்த்த மலை மற்றும் பாலக்கோடு ஊராட்சி ஒன் றியத்திலிருந்து மாரண்டஅள்ளி என மூன்று புதிய ஊராட்சி ஒன்றியங்களை தோற்றுவிக்க வேண்டும். ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தை மலைப்பகுதியென வரையறுத்து அதற் கேற்ற மலைப்பகுதிப் படி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில், மாவட்டத் தலைவராக மு.முக மது இலியாஸ், செயலாளராக வெ.தர்மன், பொருளாளராக க.வினோத்குமார், மாநில செயற்குழு உறுப்பினராக பா.சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒருங்கிணைப்பாள ராக சா.இளங்குமரன் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர்.