districts

img

யானைமடுவு பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து மேம்படுத்த வலியுறுத்தல்

தருமபுரி, நவ.21- தருமபுரி அருகே உள்ள யானைமடுவு பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலி யுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே சேலம், தருமபுரி மாவட்ட எல்லையில் உள்ளது சேர்வராயன் மலை. கடல் மட் டத்திலிருந்து ஆயிரத்து 200 அடிக்கு மேல் உயரம் உள்ள  இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டியான ஏற்காடு உள்ளது. தருமபுரியிலிருந்து பொம்மிடி வழி யாகவும் ஏற்காடு செல்லலாம். அந்த வழிப்பாதை யானை மடுவு வழியாக செல்கின்றது. இந்த பாதையில் 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலைப்பகுதி யில் வேப்பாடி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆற்றில் 10 மேற்பட்ட அருவிகளும், சுமார் 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு மலைகளின் இரு பகுதிகளுக்கு நடுவில் சாலை உள்ளது. மதுர  மரம், வேப்பமரம், மாமரம், வேங்கை மரம், அரச மரங்கள்  200 அடி உயரம் வளந்துள்ளன. பசுமை போர்த்திய சோலை வனத்திற்குள் இந்த கவரக்கூடிய இடங்களாக அணைக் கட்டுப்பகுதி யானை புல்லத்தாச்சி கூண்டு என மக்களை கவ ரும் பல இடங்கள் உள்ளன.

இந்தக்காட்டில் சில இடங்களில் பாறைகள் நடுவில் அருவி போலவும் உள்ளது. மக்கள் குளிக்கும் இடங்களும் மிக பிரம் மாண்டமான பல டன் எடை கொண்ட பாறைகளும், குகைப் பகுதி போன்ற அமைப்புகளும் உள்ளது. மிகவும் குளிர்ச்சி யாகவும், காடுகளில் பல வகையான தாவரங்களும், வானு யர்ந்த மரங்களும் இருப்பதால் காண்பதற்கு குடும்பம் குடும்ப மாக மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது கடந்த ஓராண்டுகளாக பருவ மழை நன்றாக  பெய்துள்ளதால், தொடர்ச்சியாக இந்த பகுதியிலுள்ள ஆறுக ளில் வெள்ளம் பெருக்கெடுத்து அழகாக செல்கிறது. இவற்றை காண்பதற்காக தினமும் பொதுமக்கள் ஏராளமான இந்த பகுதியில் சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். எனவே, இப்பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சுற்றுலா பயணி களும் வலியுறுத்தியுள்ளனர்.