தருமபுரி, பிப்.15- தரம் உயர்த்தப்பட்ட அரூர் நக ராட்சியில் சார் ஆய்வாளர் பணி யிடத்தை உருவாக்க வேண்டும், என நில அளவை அலுவலர் ஒன்றிப்பு வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நில அளவை அலுவ லர் ஒன்றிப்பின் தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம், தருமபுரி ஆவண காப்பக வளாகத்தில் சனி யன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் பிரபு, பொருளாளர் மா.முரு கன் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். மாநில பொதுச்செய லாளர் அண்ணாகுபேரன் சிறப்புரை யாற்றினார். மாநிலச் செயலாளர் ஆர்.கல்பனா, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், ஒப்படைப்பு செய்யப்பட்ட தருமபுரி நகராட்சி சார் ஆய்வாளர் பணியிடத்தை மீண்டும் வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் வட்டாரத்தில் பணிபுரி யும் பிரபாகர் என்பருக்கு தகுதிகள் பருவம் முடித்ததற்கான ஆணை வழங்க வேண்டும். தமிழ்நாடு அர சால் அரூர் நகராட்சியாக தரம் உயர்த் தப்பட்டுள்ளது. நகராட்சிக்கு சார் ஆய்வாளர் பணியிடம், புல உதவியா ளர் பணியிடத்தை உருவாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, அமைப்பின் தரு மபுரி மாவட்டத் தலைவராக கி.வெங் கடேசன், செயலாளராக சி.பிரபு, பொருளாளராக மா.முருகன், துணைத்தலைவராக கே.சின்னராசு, இணைச்செயலாளராக எம்.முரளித ரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். மாநிலத் தலைவர் ஜே.ராஜா நிறைவுரையாற்றினார். முடிவில், கு. சின்னராசு நன்றி கூறினார்.