districts

img

ராசிமணல் பகுதியில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ஆய்வு

தருமபுரி, செப்.19- ஒகேனக்கல் அருகே ராசிமணல் என்ற பகுதியில் புதிய அணை கட்டும் கோரிக்கை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் பாசன வசதியை பெருக்கவும், காவிரி ஆற்றின் உபரிநீர் வீணாக கடலில் கலப் பதை தடுக்கவும், ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் புத னன்று கள ஆய்வு மேற்கொண்டனர். டெல்டாவில் வேளாண் உற்பத்தி பாதிப்பு இதுகுறித்து விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.சண்முகம் கூறு கையில், காவிரி நீர் என்பது தமிழ் நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் ஒரு தொடர் பிரச்சனையாக உள்ளது. 50 ஆண்டுகள் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டாலும், கடந்த 2013  ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம்  ஒரு இறுதியான தீர்ப்பை வழங்கியது. அந்த இறுதியான தீர்ப்பை ஏற்க மறுத்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராத  நிலையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடுத்தது. 2018 ஆம்  ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப் பின் அடிப்படையில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீருக்கு பதிலாக, மழைக்காலங்களில் உபரிநீரை மட் டும் கர்நாடக அரசு வெளியேற்றி வந் தது. இந்நிலையில், அதிகமாக உபரி நீர் வரும் நிலையில், அந்த நீரை சேமிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற  விவாதம் தமிழ்நாட்டில் நடந்து வருகி றது. கர்நாடகாவிலும் அத்தகைய விவாதம் எழுந்துள்ளது. அதற்கு ஒரு  தீர்வு ஏற்படுத்தும் வகையில், ராசி மணலில் அணைகட்ட முடியுமா என் பது விவாதப் பொருளாக மாறியிருக் கிறது. மேகதாதுவில் அணை கட்டக்கூடாது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர் வாகிகளுடன் நேரடி கள ஆய்வு மேற் கொண்டோம். அதில் கிடைத்த விவ ரங்களை சேகரித்து கொண்டு, சங்கத் தின் மாநிலக்குழு கூட்டத்தில் விவா தித்து அணையை கட்டுவது நடை முறையில் எவ்வாறு சாத்தியம் என் பதை தெரிவிக்கப்படும். ஏற்கனவே, காமராசர் முதல்வராக இருந்த காலத் தில் ராசிமணல் பகுதியில் அணைகட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. எந்த கார ணத்தினாலோ இந்த திட்டம் கைவிடப் பட்டு, தற்போது இந்த அணை கட்டு வது குறித்து விவாதம் வந்துள்ளது. இதே காலகட்டத்தில் கர்நாடகா அர சும் மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மேகாதாதுவில் அணை கட்டினால் காவிரி நடுவர் மன்றமோ அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் வருவ தற்கு வாய்ப்பில்லை. மேகதாதுவில் அணைக்கட்டக்கூடாது என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்து கிறது. ராசிமணலில் அணைகட்ட வேண் டும் என்றால் தமிழ்நாடு, கர்நாடகா, ஒன்றிய அரசுகள் பேசி முடிவுக்கு வந் தால் தான் அணைகட்டுவது சாத்திய மாகும். இந்த அணைகட்டுவது குறித்து  இதுவரை தமிழ்நாடு அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆகவே, இந்த அணை கட்டுவது  குறித்து தமிழ்நாட்டில் உள்ள விவ சாய சங்கங்கள் விவாதிக்கப்படும் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு ராசி மணல் அணைகட்டும் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும், என் றார்.

உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு

மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கூறுகையில், கர்நாடகா அரசை பொறுத்த வரையில் காவிரி  நடுவர் மன்ற தீர்ப்பாக இருந்தாலும் சரி, உச்சநீதிமன்ற தீர்ப்பாக இருந் தாலும் சரி, தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் வழங்குவதில்லை. அம்மா நிலத்திலுள்ள 4 அணைகளும் நிரம்பிய  பிறகுதான் உபரிநீரை வெளியேற்றி வருகிறது. தண்ணீரை சீராக திறந்து விடாததால் காவிரி டெல்டா பகுதி களில் விவசாய சாகுபடி குறைந்து வருகிறது. தேக்கிவைக்க முடியாத லட் சக்கணக்கான கனஅடி உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. சில நேரங்களில் மட்டுமே முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்த முடிகிறது. இந்த உபரி நீரை தேக்கிவைப்பதற்கு தமிழ்நாடு அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டி யுள்ளது. ஆனால், இந்த உபரிநீரை யும் தடுப்பதற்கு கர்நாடகாத்தில் முந் தைய பாஜக ஆட்சியாளர்கள் 9 ஆயி ரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு முர ணாக மேகதாதுவில் அணைகட்ட முயற்சி செய்தது. ஒருவேலை மேக தாதுவில் அணை கட்டப்பட்டால் தற் போது மழைக்காலங்களில் வெளி யேற்றப்படும் உபரிநீர் தமிழ்நாட்டிற்கு வராது. இதனால் தான் அணைகட்ட தமிழ்நாடு அரசும், காவிரி பாசன பகுதி விவசாயிகளும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். 2 மாநிலங்களும் பயன்பெறும் இந்நிலையில் தான் தமிழ்நாடு பகுதியில் உள்ள ராசிமணலில் அணை கட்டினால் தண்ணீரை தேக்கி வைக்க  முடியும் என வல்லுநர்கள் கூறுகின்ற னர். இதன்மூலம் பெங்களூருவிற்கு குடிநீர் கிடைக்கும்; இரண்டு மாநில மக்களும் பயன்பெற முடியும். எனவே, இச்சூழலில் தான் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் தற்போது ஆய்வு செய் துள்ளது. காமராசர் காலத்தில் ராசி மணலில் அணை கட்ட அடிக்கல் நாட் டப்பட்ட அடையாளங்கள் உள்ளன.  அதன்பிறகு எம்ஜிஆர் ஆட்சிக்காலத் தில் முயற்சி நடந்துள்ளது. எனவே, அணை கட்டுவதற்கான சாத்திய கூறு கள் குறித்து அரசு தெரிவிக்க வேண் டும், என்றார்.