districts

img

அரசு பள்ளி கண்காணிப்பு கேமராக்களை உடைத்து அட்டகாசம் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 17- முதலிபாளையம் அரசு உயர்நிலைப்பள் ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து நொறுக்கிய சமூக  விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள  முதலிபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி யில், 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு  வரை சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பெரும்பா லும் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் வசிக் கக்கூடிய முதலிபாளையம் பகுதியில் இது  மிக முக்கியமான பள்ளியாக உள்ளது. இதன்  சுற்று வட்டாரத்தில் சமூக விரோத சக்திகள், இரவு நேரத்தில் பள்ளிக்குள் புகுந்து கஞ்சா  உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத் துவது, மதுபானம் அருந்துவது, பள்ளிக்கூட  உபகரணங்களை உடைத்து சேதப்படுத்து வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த னர். இதனால் முதலிபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியின் மேலாண்மைக்குழு சார் பில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு நன்கொ டையாளர்கள் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 14 கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தப்பட்டன. இதன்பிறகு பள்ளி யில் இரவு நேரங்களில் குடித்துவிட்டு பாட்டிலை உடைப்பது, பள்ளி வளாகத்தில் மலம்  கழித்து விட்டு செல்வது, குடிநீர் குழாய்களை  உடைப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் முடி வுக்கு வந்தன. எனினும், கடந்த சில மாதங்களுக்கு  முன்பு இப்பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா ஒன்றை சமூக விரோ திகள் உடைத்து சேதப்படுத்தியிருந்தனர். இதன் பிறகு, இந்த கல்வியாண்டு தொடங் கிய நிலையில், ஜூன் 15 முதல் 17 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாட்க ளாக பள்ளி விடுமுறை என்பதாலும், இந்த  வளாகத்திலேயே வகுப்பறை கட்டிடப் பணி கள் நடைபெற்றதாலும், கண்காணிப்பு கேம ராக்களை இடமாற்றம் செய்வதற்காக அவற்றை இயக்காமல் நிறுத்தி வைத்திருந்த னர். இந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல் படாமல் இருந்ததை தெரிந்து கொண்ட சமுக  விரோதிகள், ஞாயிறன்று இரவு நேரத்தில் 6  கண்காணிப்பு கேமராக்களை உடைத்து எறிந் துள்ளனர். இப்பள்ளியில் இரவு நேர காவலா ளியும் இல்லாததால், குற்றவாளிகள் துணிவு டன் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து முதலிபாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி மேலாண்மைக்குழுவின் கல்வி ஆர்வலர் எம்.மகேஸ்வரன், காவல் துறைக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் திங் களன்று தகவல் தெரிவித்தார். அதன்பேரில்  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில்  வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்தனர். கல்வித்துறையும் திங்க ளன்று விடுமுறை என்பதால், செவ்வாயன்று வேலை நாளில் நேரில் கவனித்து அரசு உயர்  அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வ தாக தெரிவித்துள்ளனர். அரசு பள்ளியில், அரசு சொத்துக்கு சேதம் விளைவித்த சமூக  விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது  சட்டப்படி கைது செய்ய உத்தரவிட வேண்டும்  என பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் எம். மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.