districts

img

நிலத்தடி நீரை மாசுபடுத்தும் காகித ஆலையை மூட வலியுறுத்தல்

ஈரோடு, மார்ச் 6- நிலத்தடி நீரை மாசுபடுத்தும் காகித ஆலையை நிரந்தரமாக மூட  வேண்டும் என கோபிசெட்டிபாளை யம் மக்கள் மாவட்ட நிர்வாகத்தில் புகார் அளித்தனர்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக்குட்பட்டது தண்ணீர்பந் தல்புதூர் மற்றும் பொம்மநாய்க்கன் பாளையம். இங்கு சுமார் 7000 மக் கள் வசித்து வருகின்றனர். இக்கிரா மங்களுக்குட்பட்டது சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள். இப்பகுதியில் உள்ளது ஸ்ரீபவளாம்பிகை பேப் பர்ஸ் & போர்டு நிறுவனம். கடந்த  சுமார் 10 ஆண்டுகளாக இயங்கி வந்த  இந்நிறுவனத்தின் கழிவுகள் சுத்தி கரிக்கப்படாமல் வெளியேற்றப்படு கிறது.  இதனால், ஆலையைச் சுற்றி யுள்ள ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் மாசுபட்டுள் ளது. இவ்வாறு மாசடைந்த தண் ணீரை பயன்படுத்தி வரும் மக்க ளுக்கு சிறுநீரகக் கோளாறு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆய்வு செய்து மாசுகட்டுப் பாட்டு துறையினர் மூலம் ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக செயல்படாமல் உள்ள ஆலையை உயர் பதவி களில் (ஐஏஎஸ், ஐபிஎஸ்) இருக்கும் தனது குடும்பத்தினர் மூலம் மின்  இணைப்பு பெற உத்தரவு பெற்றுள்ள னர். இதனால் மக்கள் மிகுந்த அச்ச மும், பீதியும் அடைந்துள்ளனர்.  கூகலூர் பேரூராட்சியில், பொம்ம நாய்க்கன்பாளையம் ஊராட்சியி லும் காகித ஆலையை அகற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. இந்நிலையில் தங்களது வாழ் வாதாரத்தையும், உயிரையும் காப் பாற்றும் வகையில் காகித ஆலையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டு மாறு அப்பகுதி மக்களும், விவசாயி களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.