திருப்பூர், ஆக.14 - காங்கேயம் நெய்க்காரன்பாளை யத்தில் குத்தகை விவசாயி வீடு சாதி ஆதிக்க கும்பலால் இடிக்கப்பட் டதைக் கண்டித்து, அனைத்து குற்றவா ளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவருக்கு வீட்டுமனைப் பட்டாவுடன் வீடு கட்டித் தருவதுடன், நிவராணம் வழங்கவும் வலியுறுத்தி ஆகஸ்ட் 18ஆம் தேதி காங்கேயத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மா னிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நெய்க்காரன்பாளையத்தில் குடியிருந்து வந்த குத்தகை விவசாயி கே.சி.சிவா வீட்டை சாதிய வன்மத் தோடு 20 பேர் கொண்ட கும்பல் கடந்த 8ஆம் தேதி இடித்து தகர்த்தனர். இச்சம் பவம் பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலு வலகத்தில் திங்களன்று நடைபெற்றது. இதில் குத்தகை விவசாயி வீடு இடிக்கப் பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண் டும், பாதிக்கப்பட்ட சிவா குடும்பத்துக்கு அதே இடத்தில் பட்டா வழங்கி வீடு கட்டித் தர வேண்டும், அரசு உரிய நிவார ணம் வழங்க வேண்டும் என்று வலியு றுத்தி வரும் 18ஆம் தேதி வெள்ளி யன்று மாலை 5 மணிக்கு காங்கேயம் நகர பேருந்து நிலையம் முன்பு அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கண் டன ஆர்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், திராவிடர் கழ கம் ஆகிய கட்சிகளின் காங்கேயம் நக ரத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.