திருப்பூர், பிப்.18- திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரி யப்பனவர் சனியன்று மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாலை பணிகள், கட்டட பணிகள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் சீர்மிகு நகர திட்ட பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு 50, தென்னம்பாளையம் பகு தியில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற நல வாழ்வு மையம், வார்டு 21, குமரன் பூங்கா மற்றும் வார்டு 43, ஆலங்காடு பகுதிக ளில் செயல்பட்டு வரும் இரவு தங்கும் விடுதிகளை பார்வை யிட்டு முறையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு உத்தர விட்டார். மேலும், வார்டு 27 குமார் நகர் மற்றும் வார்டு 1 அங்கே ரிபாளையம் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிக ளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க உத்தரவிட் டார்.