சேலம், பிப்.15- காடையாம்பட்டி அருகே உள்ள கூட்டுறவு உரக்குடோனை வேறு இடத்திற்கு மாற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கே.என்.புதூர் தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கம், 5 ஆயிரத்து 200 உறுப்பினர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டு காலமாக வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் கூட்டுறவு சங்கத்திற்கு 10 சென்ட் நிலம் உள்ளது. சங்கத்திற்கு தேவையான உரங்களை பாதுகாக்க 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டிடம் கட்ட, அரசு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, கே.மோரூரில் உர குடோன் கட்ட கூட்டுறவு சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனால், கே.என்.புதூர் பகுதியில் உரக்குடோனை அமைக்க கூட்டுறவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவ தாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, கே. மோரூர் பகுதியில் உரக்குடோன் கட்ட அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும், அடிக்கல் நடும் நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. காடையாம்பட்டி காவல் துறையினர் எண்ணற்றோர் குவிக்கப்பட்டு, பொதுமக் களை அதிகாரிகள் புறக்கணித்தாகவும் பொதுமக்கள் தெரி வித்துள்ளனர்.