districts

img

நவம்பர் புரட்சி தினம்: திருப்பூர் மாவட்டத்தில் எழுச்சி கொண்டாட்டம்

திருப்பூர், நவ.7 - மனிதகுலத்தின் சமத்துவக் கனவை நடை முறையில் நிகழ்த்திக் காட்டிய மகத்தான ரஷ்ய சோசலிசப் புரட்சி தினம், திருப்பூர்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எழுச்சி யுடன் கொண்டாடப்பட்டது. நவம்பர் 7 புரட்சி தினக் கொடியேற்று விழாவில் ஏராளமா னோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் மூத்த  தலைவர் என்.கோபாலகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற புரட்சிதினக் கொடி ஏற்று  விழாவில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் செங்கொடியை ஏற்றி வைத்தார். கட்சி யின் மாவட்டச்செயலாளர் செ.முத்துகண் ணன் நவம்பர் புரட்சி தினத்தின் சிறப்புகள் குறித்து பேசினார். இதில் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், வடக்கு ஒன் றிய செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.மைதிலி, வை. ஆனந்தன் உட்பட கட்சி உறுப்பினர்கள் திரளா னோர் பங்கேற்றனர். திருப்பூர் தெற்கு மாநகர அலுவலகமான  தோழர் பி.ஆர். நிலையத்தில் நடைபெற்ற புரட்சி தின கொடியேற்று விழாவில் மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜ கோபால் செங்கொடியை ஏற்றி வைத்தார்.  மாநகரில் மிசின் வீதி, தென்னம்பாளையம், பட்டுக்கோட்டையார் நகர், ராயபுரம், கேவி ஆர் நகர் மற்றும் அரசுப் பேருந்து பணி மனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புரட்சி  தினக் கொடியேற்று நிகழ்வுகள் நடைபெற் றன. இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.சுந்தரம், பெ.செல்லதுரை, மாநகரக்குழு  உறுப்பினர்கள் பி.பாலன், கே.பொம்மு துரை, பா.ஞானசேகர், ஜி.செந்தில்குமார், த. ஆறுக்குட்டி, நா.சஞ்சீவ் உள்பட கிளைச் செய லாளர்கள், கட்சி ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தாராபுரம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாரா புரம் தாலூக்கா குழு சார்பில் நவம்பர் புரட்சி  தினம் கட்சி அலுவலகத்தில் கடைப்பிடிக்கப் பட்டது. கட்சியின் தாலூக்கா குழு உறுப்பி னர் ஆர்.வெங்கட்ராமன் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் மூத்த தலைவர் ஆர். வெள்ளியங்கிரி செங்கொடியை ஏற்றி வைத் தார்.  இதைத்தொடர்ந்து கூட்ட அரங்கில் புரட்சி  தின பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில் தீக்கதிர் நாளிதழ் ஆசிரியரும், மாநி லக்குழு உறுப்பினருமான எஸ்.பி.ராஜேந் திரன் நவம்பர் புரட்சி குறித்து சிறப்புரை ஆற்றி னார். இதைத்தொடர்ந்து 27 தீக்கதிர் சந்தாக்க ளுக்கு உரிய தொகை ரூ.54 ஆயிரத்தை  கட்சி யின் தாலூக்கா குழு உறுப்பினர் ஆர்.ராஜா,  தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, தாலுக்கா குழுச் செய லாளர் என்.கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகி கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

வேலம்பாளையம்:

நவம்பர் புரட்சியின் 106ஆம் ஆண்டு  கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தண் ணீர்ப் பந்தல் காலனி, வேலம்பாளையம், அனுப்பர்பாளையம் புதூர், அணைப்பாளை யம், ரங்கநாதபுரம், பெரியார் காலனி ஆகிய  பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் செங்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில், நகரச் செயலாளர் ச.நந்தகோபால், மூத்த தலைவர் வி.பி.சுப்பிரமணியம், நகரக்குழு உறுப்பினர்கள் அ.உமாநாத், ஆர்.சுகுமார், பி.பாபு, கிளைச் செயலாளர்கள் எம்.வெள் ளிங்கிரி, வி.ஆர்.சரவணகுமார், ப.செல்வி, எஸ்.செல்வகுமார், ஜார்ஜ் வர்கீஸ், சிஐடியு  நிர்வாகிகள் எஸ்.வேல்முருகன், என்.குபேந் திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி: ஊத்துக்குளி தாலுக்காவுக்கு உட்பட்ட ஊத்துக்குளி டவுன், குன்னத்தூர், ரெட்டிபா ளையம் அம்பேத்கர் நகர், கே.கே.நகர், பாப் பம்பாளையம், செங்கப்பள்ளி, குன்னம் பாளையம், நீலாகவுண்டம்பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் நவம்பர் புரட்சி தின  கொடி யேற்று விழா நடத்தப்பட்டது. இதில் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார்,  தாலுக்கா குழுச் செயலாளர் எஸ்.கே.கொளந் தசாமி, தாலுக்கா குழு உறுப்பினர்கள் கை. குழந்தைசாமி, ஆர்.மணியன் மற்றும் கிளைச்  செயலாளர்கள் உள்பட திரளானோர் கலந்து  கொண்டனர்.